Don't Miss!
- News
உலகில் அறிவான சாதி பிராமணர்.. பாஸ்கி பேசுறது காமெடியல்ல! அவரே காமெடி - கொந்தளித்த இயக்குநர் நவீன்
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இனிமேல் வச்சி செய்வேன்... ஷிவின், ரச்சிதாவிடம் சவால் விட்ட அசீம்... ஒன்லி பேச்சு மட்டும் தானா பாஸ்?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 87வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதுவரை 13 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆகிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே டிக்கெட் டூ ஃபினாலே என்ற டாஸ்க் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.
சத்தமே
இல்லாமல்
சண்டையை
மூட்டிவிட்ட
பிக்பாஸ்..ஏடிகேக்கு
கட்டம்
சரியில்லை
போல..நெட்டிசன்ஸ்
கிண்டல்!

பிக் பாஸ் 87வது நாள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 87வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர், இனிமேல் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளார். இதனால் போட்டியாளர்கள் கடுமையாக மோதி வருகின்றனர்.

டைல்ஸ் போட்டியில் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் போட்டிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் கோல்டன் டிக்கெட் டாஸ்க் நடைபெறுகிறது. வார்த்தை மோதல், விவாதம், பிசிகல் டாஸ்க் என பலவிதங்களாக போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஒவ்வொன்றிலும் வெற்றிப் பெறும் போட்டியாளர்களுக்கு டைல்ஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அதனை வைத்து அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம். அதன்படி இதுவரை மைனா, அமுதவாணன் இருவரும் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

87வது நாள் ப்ரோமோ
இந்நிலையில், இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ரச்சிதாவை கலாய்த்தனர். உப்புமா சாப்பிட கூப்பிட்டதால் தான் ரச்சிதாவை போட்டியாளர்கள் கலாய்த்ததாக தெரிகிறது. அதனையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகேவும் மைனா நந்தினியும் தனியாக சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அசீம் எல்லாத்தையுமே பெர்சனலாக எடுத்துக்கொள்கிறான், ஆனால் பேசும் போது அப்படி ஏதும் இல்லையென சமாளித்துவிடுவான் என ஏடிகே கூறுகிறார். அதேபோல் ரச்சிதாவும் பெர்சனலாக எடுத்துக்கொண்டு அதை ஷிவின் மூலமாக கொட்டி வருகிறார் என குற்றம் சாட்டுகிறார். இறுதியாக விக்ரமனை பற்றி பேசும் ஏடிகே, விக்ரமனை சுத்தமாக பிடிக்கல, அவர் எதுக்கெடுத்தாலும் குற்றம் சொல்லிட்டே இருக்கார். ஆனா ஷிவின் கிட்ட மட்டும் சிரிச்சி சிரிச்சு பேசுவதாக மைனாவிடம் புலம்புகிறார்.

அசீம் விட்ட சவால்
இதனையடுத்து தற்போது 87வது நாளுக்கான 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சைக்கிள் ஓட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அமுதவாணன் ஓட்டும் சைக்கிளின் முன்னால் அமர்ந்திருக்கும் அசீம் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அசீம், ஒரே சைக்கிளில் இருக்கும் ஷிவின், ரச்சிதா இருவரையும் பார்த்து, "உங்களால் தான் எனக்கு இப்படி ஆச்சு, நான் ஒழுங்கா விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போ எனக்கு தான் பாதிப்பு. சொல்லிட்டு செய்றேன், அடுத்த கேம் உங்க ரெண்டு பேரையும் வச்சு செய்றேன்" என சவால் விடுகிறார். இதனால் ஷிவினும் ரச்சிதாவும் பேசமுடியாமல் திகைத்து நிற்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அசீம் பேச்சு மட்டும் தான் பலமா இருக்கு, இந்த வாரம் டாஸ்க் எல்லாவற்றிலும் ஒழுங்காவே விளையாட முடியல என ட்ரோல் செய்து வருகின்றனர்.