Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அசீம் அமுதவாணனை அடித்தாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
சென்னை : பிக் பாஸ் வீட்டில் அசீம் ஒரு வலுவான போட்டியாளராக இருந்தாலும், சில நேரம் அவரின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
நேற்றைய எபிசோடில் அமுதவாணனை அடிக்க பாய்ந்து வீட்டிற்குள் ஒரு பெரிய சண்டையை ஏற்படுத்தி விட்டார்.
இந்த சண்டையில் அமுதவாணனை அசீம் அடித்தாரா இல்லையா என்று பெரிய விவாதமே நடந்து வருகிறது.
எப்ப வீட்டை விட்டு போகப்போறே.. மாமியாரின் கேள்வியால் சஞ்சலமடையும் காவ்யா!
பிக் பாஸ் சீசன் 6
பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் ஆதிவாசிகளின் செல்வங்களை ஏலியன்ஸ் திருடி வைத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் யாரிடம் செல்வம் அதிகமாக இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அது மட்டும் இல்லாமல், அதிக செல்வத்தை வைத்திருப்பவர் நாமினேஷனிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
கேவலமா கேம் விளையாடுறீங்க
இதனால், கற்களை திருடுவதற்காக அதிரடி தகராறு நடக்கிறது. அப்போது, ஆதிவாசியான கதிரவனை அமுதவாணன் மடக்கிப் பிடித்து வைத்துக்கொண்டு அவரது கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டு விடுகிறார். இதனால், கதிருக்கு ஆதரவாக அசீம் அமுதவாணனிடம் இப்படியா கேவலமா கேம் விளையாடுவீங்க என்ற ஏகவசனத்தில் பேசினார். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி இது பெரிய சண்டையாக வெடித்தது.
என்னை வெளியில் அனுப்புங்க
அதில் அசீம் தன்னை அடித்ததாக அமுதவாணன் வீட்டில் இருப்பவர்களிடம் கத்தி கூச்சலிட்டார். இதன் பின்னர் ஹவுஸ்மேட்ஸ் எல்லோருமே அசீமுக்கு எதிராக திரும்பி நீ என்ன ரௌடியா? வீட்டில் ரௌடித்தனம் பண்றீங்க என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி திட்டினார்கள். அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக திரும்பியதால் கடுப்பான அசீம் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு போகப்போறேன்.என்னை வெளியே அனுப்பிடுங்க என்று பிக்பாஸிடம் கண்ணீர் மல்க கெஞ்சினார்.
மயங்கி விழுந்த அசீம்
இதையடுத்து,மிகுந்த மன உளைச்சலில் இருந்த அசீம் திடீரென மயங்கி விழுந்தார். மெடிக்கல் ரூமில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வந்த அசீம், அமுதவாணனை கட்டிப்பிடித்து தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது ரொம்ப தப்பு என்று கட்டி அணைத்து மன்னிப்பு கேட்டார்.
பூக்களை திருடினார்
உடல்நிலை சரி இல்லாததால், வீட்டிற்குள் படுத்திருந்த அசீம், தனம் அசந்து தூங்கிய நேரமாக பார்த்து குளத்தில் இருந்த அனைத்து பூவையும் எடுத்துச் சென்று ஒளித்து வைத்துவிட்டார். காலையில் குளத்தில் பூக்கள் இல்லாததை பார்த்து தனலட்சுமி ஆத்திரத்தில் கத்தினார். உடல் நிலை சரியில்லாத போதும் கேமுக்காக அசீம் விளையாடிய விதத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.