Don't Miss!
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
என்ன பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை..ராமை அசிங்கப்படுத்திய அசீம்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு!
சென்னை : என்ன பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை என அசீம், ராமை முகத்திற்கு நேராக பேசியது, இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.
இந்த வார வீக்லி டாஸ்கிற்காக வீடு நீதிமன்றமாக மாறி உள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும் மெயின் டோர் கேமரா வழியாக தங்களுடைய வழக்கை பதிவு செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களே அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவருக்கான வழக்கை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சம் என்றால் எடுப்பேன்..பணப்பெட்டி வந்தால் எப்படி எடுப்பது?..ஐடியா கொடுத்த அசீம்
ஏடிகே நீதிபதி
இதையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் கேமரா முன்பு தங்களுடைய வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில், அமுதவாணன் தரப்பு வழக்கறிஞராக நேற்று அசீம் ஆஜராகி சிறப்பான வாதத்தை எடுத்து வைத்தார். விக்ரமனை கூண்டில் நிற்க வைத்து அடுக்கடுக்கான கேள்வியை கேட்டார். டாஸ்க் தான் என்ற போதும் அசீமின் வாதம் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.
அசீம் மீது வழக்கு போட்ட ஏடிகே
இதையடுத்து, இன்று கடந்த வாரம் நடந்த ராஜவம்சம் டாஸ்கின் போது சாவியை அசீம் மறைத்து வைத்தது தொடர்பாக ஏடிகே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் அசீம் தரப்பு வழக்கறிஞரான ஷிவினும், ஏடிகே தரப்பு வழக்கறிஞரான விக்ரமனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் நீதிபதியாக ராம் இருக்கிறார்.
கேள்விக்கு மட்டும் பதிலளிப்பேன்
இதையடுத்து,தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் சாவி திருட்டு வழக்கு தொடர்பாக விக்ரமன் அசீமிடம் விசாரணை நடத்துகிறார். அப்போது விக்ரமன் நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிறார். இதற்கு பதிலளித்த அசீம், என் மீது போடப்பட்டுள்ள வழக்கு சம்மந்தமான கேள்விக்கு மட்டும் தான், நான் பதிலளிப்பேன் என்கிறார்.
ரசிகர்கள் ஆர்வம்
இதற்கு கேள்விக்கு நீங்கள் பதிலளித்து தான் ஆகவேண்டும், நீங்கள் ஏடிகேவிடம் பேசுறீங்களா ? இல்லை ரேப் பண்றீங்களா என கேட்டீங்களா என கேட்கிறார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஒருவரின் தொழிலை வைத்து அவர்களை விமர்சிக்கக்கூடாது என்கிறார் . நீதிபதி ராமின் பதிலால் கடுப்பான அசீம் வீட்டில் சும்மா படுத்து தூங்குறவன் எல்லாம் என்னை பத்தி பேச தகுதியே இல்லை என்கிறார். நேற்றைய பிக் பாஸ் எபிசோடும் காரசாரமாகவே இருந்த நிலையில், இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.