Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தனியாதான் வந்தேன்..தனியாவே போகிறேன் கண்கலங்கி வெளியேறிய ஷெரினா..கதறி அழுத ஆயிஷா!
சென்னை : ரசிகர்களின் பேராதரவோடு இந்த முறையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 28 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.
வாவ்.. எவ்ளோ பெரிய கேக்.. பிக் பாஸ் வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கமல் பர்த்டே பார்ட்டி!
பிக்பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிக்கும் ரியாலிட்ரி ஷே தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த சில சீசன்களாகவே எதிர்பார்க்கப்பட்ட முத்து முதல் இரண்டு வாரத்திலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனையடுத்து நடைபெற்ற முதல் எலிமினேஷனில் பிரபல நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டார்.
அந்த டிவி, இந்த டிவி
கடந்த வாரம் பாடகர் அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து நடைபெற்ற கடந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த டிவி, இந்த டிவி டாஸ்க்கில் போட்டிலாளர்கள் மிகவும் அனல் பறக்க சிறப்பாக விளையாடியது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தை கூட்டியது. இந்த டாஸ்கின் போது அசீம், மகாலட்சுமி, மைனா ஆகியோர் இடையே சண்டை நடைபெற்றது.
ஷெரினா வெளியேறினார்
இந்த வாரம் ஆயிஷா, விக்ரம், அசீம், கதிரவன், ஷெரினா நாமினேஷனில் இருந்த நிலையில், சனிக்கிழமை அசீம், விக்ரமன் ஆகியோர் சேஃவ் செய்யப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து, ஷெரினா எலிமினேட் ஆகி வெளியேறினார். அவரின் எலிமினேஷன் அறிவிப்பை கமல் மலையாளத்திலேயே அறிவித்தார்.
கதறி அழுத ஆயிஷா
ஷெரினா வெளியேறியதை தாக்க முடியாமல் ஆயிஷா கதறி கதறி அழுதார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறினர். ஆனால், ஆயிஷா சமாதானம் ஆகவில்லை. அதே போல ஷெரினாவும் கண்ணீருடன் இந்த வீட்டுக்கு தனியாகத்தான் வந்தேன், தனியாகவே வெளியில் போகிறேன் என்று கண்ணீருடன், ஆயிஷாவை பார்த்துக்கொள்ளுங்கள் என்றுகூறிவிட்டு வெளியேறினார்.