பிக் பாஸ் சீசன் 7 முதல் எவிக்ஷன்.. குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறும் போட்டியாளர் யார்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பவா செல்லத்துரை மற்றும் விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளனர்.
நாமினேஷன் ப்ராசஸ்: இதையடுத்து, முதல் வாரமே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. இதில், ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.
வெளியேறும் போட்டியாளர்: இதில், யுகேந்திரன், பிரதீப் இருவரும் டேஞ்சர் ஜோனில் இருந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர்களுக்கு கணிசமான வாக்குகள் அதிகரித்ததால் இவர்கள் இருவரும் தப்பித்து உள்ளனர். அனன்யா ராவ் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதால், அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருமையில் பேசிய ஜோவிகா; இந்நிலையில், நேற்று விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது. இதில், எல்லாரும் டாக்டருக்கு படிச்சா யாரு கம்பவுண்டர் வேலை பார்ப்பது. இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன என சொல்லி இந்த விஷயத்தை சென்சேஷன் ஆக்கினார் ஜோவிகா. இதில் ஜோவிகாவின் பேச்சுக்கு அங்கிருந்த மாயா உள்ளிட்ட போடியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உசுப்பேற்றி விட்டதால் ஒருகட்டத்தில் விசித்ராவை ஒருமையில் பேசினார் ஜோவிகா.


Click it and Unblock the Notifications











