Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அடிக்கடி அப்பா விஜயக்குமாரை வம்புக்கு இழுக்கும் வனிதா... இன்னும் என்னவெல்லாம் பண்ண போகிறாரோ
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தனது அப்பா விஜயக்குமாரை வம்புக்கு இழுப்பது போல் அடிக்கடி, அப்பாவை பற்றி பேசி வருகிறார் வனிதா. இதனால் பிக்பாஸ் அல்டிமேட்டில் மட்டுமல்ல, வெளியில் சென்ற பிறகும் வனிதா இன்னும் னெ்னவெல்லாம் பண்ண போகிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
நடிகை மஞ்சுளா -நடிகர் விஜயக்குமாரின் மூத்த மகளான வனிதா விஜயக்குமார், விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். சில படங்களில் மட்டும் நடித்த வனிதா, சொந்த வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த பல பிரச்சனைகளால் மீடியாக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். அதிலும் குக்வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 3 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு மிகவும் பாப்புலர் ஆனார்.
அங்க எரியுற பல்புல என்ன எழுதியிருக்குன்னு பார்த்தீங்களா.. வாயை கோணலாக வைத்து போஸ் கொடுத்த நயன்தாரா!
வனிதா விஜயக்குமார் - விஜயக்குமார் சண்டை
நடிகை மஞ்சுளா உயிரிழந்த பிறகு, அப்பா விஜயக்குமார் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வனிதா விஜயக்குமாருக்கு பிரச்சனை ஏற்பட்டது. சென்னை - ஆலப்பாக்கத்தில் உள்ள வீடு தொடர்பாக விஜயக்குமார் மற்றும் வனிதா இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டு, போலீஸ் வரை சென்றது விவகாரம். மஞ்சுளா பெயரில் இருக்கும் அந்த வீடு சினிமா ஷுட்டிங்கிற்காக வாடகைக்கு விடப்படுகிறது. இதனை ஷுட்டிங் என்ற பெயரில் வாடகைக்கு எடுத்த வனிதா, அம்மா பெயரில் இருக்கும் வீடு தனக்கு தான் சொந்தம் என வாதம் செய்ததால், விஜயக்குமார் போலீசில் புகார் அளித்தார்.
வனிதாவுடன் பேச்சுவார்த்தையில்லை
இந்த விவகாரத்திற்கு பிறகு விஜயக்குமார் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், வனிதாவிற்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. வனிதாவின் இரண்டாவது கணவருடனான பிரச்சனை, மூன்றாவது திருமணம் என எந்த விவகாரத்திலும் விஜயக்குமார் குடும்பத்தினர் தலையிடவில்லை. வனிதாவை பற்றி பேசுவதையும் அவர்கள் தவிர்த்து வந்தனர்.
அப்பாவை ஏன் இழுக்குறீங்க
இப்படி வெளியில் பல பிரச்சனைகள் போய் கொண்டிருக்கையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வனிதா, அடிக்கடி அப்பா விஜயக்குமார் பற்றி பேசி வருகிறார். குடி அல்லது கடி டாஸ்க்கின் போது, அப்பாவின் சரக்கு பாட்டிலை தெரியாமல் திருடி எடுத்து குடுத்தது உண்டா என ஒரு கேள்வி வந்தது. அந்த டாஸ்க்கின் போது, இதில் எதற்காக எங்க அப்பாவை இழுக்க வேண்டும். ஏற்கனவே அந்த ஆளு என் கூட பேசுறது இல்ல. திட்டி தீர்கிறார். இதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா என விஜயக்குமார் பற்றி பேசினார். இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
உங்க பேர காப்பாத்திட்டேன் டாடி
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோவில், இந்த வாரம் நடத்தப்பட்ட, நீ யாருன்னு எனக்கு தெரியும் என்ற டாஸ்க்கில் சக போட்டியாளர்கள் அளித்த ஓட்டுக்கள் எண்ணிக்கையில் மற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக காட்டப்பட்டது. இதில் வீட்டில் நாட்டாமை செய்பவர் என்ற பட்டம் வனிதாவிற்கு வழங்கப்படுகிறது. 14 போட்டியாளர்களில் 12 பேர் வனிதாவின் பெயரை சொன்னதாக அனிதா கூறுகிறார். இந்த போர்டை கழுத்தில் மாட்டிக் கொள்ளும் வனிதா, டாடி...உங்க பேர காப்பாத்திட்டேன் டாடி என சொல்கிறார். நாட்டாமை படத்தில் சரத்குமாரின் அப்பா ரோலில் நடித்த விஜயக்குமார் நாட்டாமையாக நடித்ததையே வனிதா இன்று கூறி உள்ளார்.
Recommended Video
அவரை ஏன் வம்புக்கு இழுக்கிறார்
இந்த பார்த்த ரசிகர்கள், இவர் ஏன் அடிக்கடி நடிகர் விஜயக்குமாரை வம்பு இழுப்பதை போல் பேசுகிறார். ஏற்கனவே இந்த வாரம் முழுவதும் காஃபிக்காக இவர் பண்ணிய அலம்பல் தாங்க முடியல. இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ தெரியவில்லை.பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே விஜயக்குமாரை வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். வெளியில் போன பிறகு என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ தெரியவில்லை என பலர் கூறுகின்றனர்.