Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
எவிக்ஷனில் இருந்து அடுத்தடுத்து எஸ்கேப் ஆகும் போட்டியாளர்கள்... முதலில் வெளியேறப் போவது யார் ?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒரு புறம் விமர்சனங்களை பெற்றாலும், பலர் அதை ரசித்து பார்த்து வருகின்றனர். 24 மணி நேர நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் இதை என்ஜாய் செய்து பார்த்து வருகிறார்கள். முதல் வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
Recommended Video
ஜனவரி 30-ம் தேதி துவங்கிய பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேர நிகழ்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனால் 24 மணி நேரமும் எப்படி காட்ட முடியும் என பலர் கேட்டனர். என்ன தான் செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே அதிகமானவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். 14 போட்டியாளர்கள் பற்றிய பலரின் பார்வைகளும் மாறி வருகிறது.
அப்போ தறுதலை.. இப்போ தாலியை அறுக்காதே.. மீண்டும் பெண்களிடம் எல்லை மீறி பேசும் பாலாஜி முருகதாஸ்!
கடுப்போத்துறாங்க மைலார்ட்
போட்டியாளர்கள் தூங்குவது, பல் தேய்ப்பது, வாக்கிங் போவது என அனைத்தும் காட்டப்படுவதால் சிலருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியது. ஒருவர் தூங்குவதை, இன்னொருவர் தூங்காமல் டிவியில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா. சினேகன் காலையில் வாக்கிங் போனதை காட்டிய போது, அவர் உடல் ஆரோக்கியதிற்காக நடக்கிறார். அதை நாம் ஒரே இடத்தில் வெட்டியாக உட்கார்ந்து பார்க்க வேண்டுமா என்றெல்லாம் கேட்டனர். அதே போல் டாஸ்க்கில் கேட்கப்பட்ட கேள்விகளும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
நாமினேட் ஆன 8 பேர்
ஆனால் ப்ரோமோவில் வனிதா போடும் சண்டைகளை பார்த்தவர்கள், அடடா...இந்த சீசனை மிஸ் பண்ணிட்டோமே என நினைத்து அதற்கு பிறகு பார்க்க துவங்கி விட்டனர். நிகழ்ச்சியி துவங்கிய அடுத்த நாளே நாமினேஷன் நடத்தப்பட்டு, அதில் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வனிதா, சுரேஷ், அபினய், ஜுலி, சுருதி, சிநேகன், நிரூப், அனிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் முதல் ஆளாக வெளியேறுவார் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், பிரஸ் மீட் டாஸ்க்கை வைத்தை அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டனர்.
அடுத்தடுத்து எஸ்கேப்
முதலில் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதால் இந்த வாரம் ஜுலி தான் வெளியேறுவார் என்றார்கள். ஆனால் நேற்று நடந்த பிரஸ்மீட் டாஸ்க்கில் ஜுலி பேசியது அவருக்கு ஆதரவை அதிகரிக்க செய்தது. இவரைத் தொடர்ந்து அபினய் செல்வார் என்றார்கள். ஆனால் இன்று நடந்த பிரஸ்மீட்டில் அவரின் இமேஜும் உயர்ந்து விட்டது. நேற்ற இரவு வனிதா குரூப்பை சேர்ந்தவர்கள் போட்ட திட்டம், அபினய்யை காமெடியன் ஆக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு நேர் மாறாக அவர் ஹீரோ ரேஞ்சிற்கு உயர்ந்துவிட்டார். தற்போதைய நிலவரப்படி, ஹவுஸ்மேட்கள் மற்றும் ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி வனிதா தான் கடைசியில் இருக்கிறார்.
வனிதா எவிக்டடா ?
ஆனால் வனிதா கன்டென்ட் கொடுக்கிறார் என்பதால் கண்டிப்பாக வெளியேற்ற மாட்டார்கள். பிக்பாஸ் அல்டிமேட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சையான, பரபரப்பான போட்டியாளர் என்றால் வனிதா தான். வனிதா வெளியே சென்றால் நிகழ்ச்சியே முடிந்து விடும் என சுரேஷ் சக்கரவர்த்தி, நேற்று வனிதாவிடமே கூறினார். தினசரி ப்ரோமோக்களே வனிதாவை வைத்து தான் வெளியிடுகிறார்கள்.
அப்போ யார் தான் போக போகிறார்
இந்த வாரம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஜுலி, அபினய் ஆகியோர் அடுத்தடுத்து எவிக்ஷனில் இருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர். தற்போது எவிக்ஷன் லிஸ்டில் அடுத்து இருப்பவர் சுருதி. இவர் தான் வெளியேற போகிறாரா இல்லை ஒருவேளை முதல் வாரத்தில் எவிக்ஷன் இல்லை என்று சொல்லி விடுவார்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.