பிக் பாஸ் வின்னர் ஆரவ்வா?: இது அநியாயம்- நடிகை குமுறல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவை வெற்றியாளராக அறிவித்தது அநியாயம் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்துவிட்டது. 100வது நாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
இதை கேட்டு ஆரவே உணர்ச்சிவசப்பட்டார்.

ஆரவ் ஆர்மி
ட்விட்டரில் ஓவியா ஆர்மி போன்றே ஆரவ் ஆர்மி செயல்பட்டு வந்தது. அதை பார்த்து சிலர் ஆரவுக்கு எல்லாம் ஒரு ஆர்மியா என்று கிண்டல் செய்தனர்.
கஸ்தூரி
#BiggBossGrandFinale
ஆராம் ?
ஆரவாம்.
ஆரு ?
ஆரவ்.
ஆரவ்வ்வ்வ்வ்வ்வ் !
#அநியாயம் என்று ஆரவ் வெற்றி பெற்றது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஓவியா ஆர்மி
ஆரவை ட்விட்டரில் கழுவிக் கழுவி ஊத்தி வந்த ஓவியா ஆர்மிக்கும் பிக் பாஸ் வெற்றியாளர் அறிவிப்பு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் கவலையில் உள்ளனர்.

கணேஷ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராம் தான் ஜெயிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஆரவ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











