Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஜய் டிவியில் விஜேவான பிக்பாஸ் பிரபலம்.. முதல் ஷோவே ஸ்பெஷல்.. அப்போவே அக்ரிமென்ட் போட்ருப்பாங்களோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற பிரபலம் ஒருவர் விஜய் டிவியில் விஜேவாகியுள்ளார்.
Recommended Video
சன்டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக பணியாற்றியவர் அர்ச்சனா.
என்னையை விட எடுப்பாவும்.. துடிப்பாவும் யாராச்சும் இருக்காங்களா.. சொல்லங்க பார்ப்போம்.. கங்கனா பலே!
அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பெரும் விமர்சனம்
இதில் அன்புதான் ஜெயிக்கும் என கேங் ஃபார்ம் செய்துக்கொண்டு விளையாடினார் அர்ச்சனா. அவரது பாரபட்சமான நடவடிக்கையால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளானார்.
முதல் நாளே பிரச்சனை
அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார். இதனால் ஒப்பந்தத்தின்படி அவர் நிகழ்ச்சியை முடிக்காமல் பிக்பாஸில் பங்கேற்க முடியாது என முதல் நாளே ஜீ தமிழ் சட்ட வல்லுநர்கள் பிரச்சனை செய்ததாக தகவல் வெளியானது.
விஜய் டிவியில் ஆங்கர்
இதனால் அந்த பிரச்சனைகளை எல்லாம் பேசி சரி செய்துவிட்டு பிக்பாஸ் தொடங்கி 10 நாட்கள் கழித்து வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் அர்ச்சனா. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் அர்ச்சனா விஜய் டிவியிலேயே ஆங்கராகிவிட்டார்.
காதலே காதலே..
வரும் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக காதலே காதலே என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் தங்களின் ரியல் ஜோடியுடன் பங்கேற்கின்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அர்ச்சனாதான் ஆங்கர்
இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தான் தொகுத்து வழங்குகிறார். இதன் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த காதலே காதலே நிகழ்ச்சி காதலர் தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை மிதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இங்கேயே தங்கிவிட்டாரா?
இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனாவின் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருத்தத்தை கூட்டிக்காதீங்க மக்களே என கூறி வருகின்றனர். மேலும் பலர் பிக்பாஸ் முடிந்த பிறகு அர்ச்சனா இங்கேயே தங்கிவிட்டாரா என்றும் கேட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தூற்றும்
அர்ச்சனாவின் புரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், அன்பை அரசியலாக்கி அது ஜெயிக்கும்னு நம்பி அசிங்கப்படுத்திய அர்ச்சனா - தவறை உணர்ந்து ஆரியிடமும், மக்களிடமும் உண்மையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. அது உங்களை வாழ வைக்கும் இல்லை என்றால் தொடர்ந்து தூற்றும்.. என பதிவிட்டுள்ளார்.
துரத்தி விட்டாங்களா?
அர்ச்சனா காதலே காதலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பார்த்த இந்த நெட்டிசன், ஜீ தமிழ் இவரை துரத்தி விட்டாங்களா? பிக்பாஸுக்கு பிறகு அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.
முதல்ல துரத்துங்கள்
விஜய் டிவியில் அர்ச்சனா காதலே காதலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.. அர்ச்சனாவை முதல்ல உங்க சேனலை விட்டு துரத்துங்கள் விஜய் டிவி என பதிவிட்டுள்ளார்.