Don't Miss!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அறம் இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் பிரபலம்
சென்னை: பிக்பாஸ் டேனி அடுத்ததாக கோபி நயினார் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தின் மூலம் வெகுவாக பாராட்டுக்களை பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். ஆழ்துளாய்க் கிணறு, தண்ணீர்ப் பஞ்சத்தின் பின்னால் உள்ள அரசியல் என பல விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டது.
அறம் திரைப்படத்தை இயக்க எப்படி பல போராட்டங்களை சந்தித்தாரோ அதேபோல் தன்னுடைய அடுத்த படத்திற்கும் போராட்டங்களை சந்தித்து வந்தார்.
கடந்த ஒரு வருட காலமாக ஹீரோ யாரென்று முடிவாகாமல் போனதால் தள்ளிப் போனது. முதலில் சித்தார்த் நடிப்பதாக இருந்தது, பிறகு ஆர்யா நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. கடைசியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். அதுவும், இல்லை என்று ஆனது.
இப்படி கதை கேட்டு ஓகே சொன்னவர்கள் சில காரணங்களால் விலகிப்போக, இப்போது நடிகர் ஜெய்யை ஹீரோவாக வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். இந்த தகவலை பிக்பாஸ் டேனி உறுதிபடுத்தியுள்ளார்.
என்னுடைய அடுத்த படம் ஜெய்யுடன் நடிக்கிறேன். அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார் தான் இயக்குனர். நேற்று படப்பிடிப்பு ஆரம்பமானது. நடிகர் ஜெய்க்கு ஸ்பெஷல் நன்றி! தங்களின் ஆசீர்வாதம் தேவை என ட்வீட் செய்துள்ளார்.
ஜெய் இப்படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பாக்சராக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.