Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார்.. காதலன் மீது பிக்பாஸ் ஜூலி பரபரப்பு புகார்!
சென்னை: காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி தனது காதலர் மீது பிக்பாஸ் பிரபலமான ஜூலி போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டார்.
அவரது வீடியோக்கள் பெரும் வைரலானது. இதனால் யார் இந்த ஜூலி என கேட்கும் அளவுக்கு பிரபலமானார்.
என்னலாம் சிந்தித்த உள்ளங்களுக்கு நன்றி... கமல் மகிழ்ச்சி
ஓவியாவை ஓரம்கட்டி
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இதில் காயத்ரி, சக்தி, நமீதா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு ஓவியாவை டார்கெட் செய்தார். நடிகை ஓவியாவுக்கு எதிராக பல்வேறு பொய்களை கூறினார். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஓவியாவை பிக்பாஸ் வீட்டில் ஓரம் கட்டினார் ஜூலி.
குறும்படம் போட்ட கமல்
இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கூறிய பொய்களை, குறும்படமாக போட்டு அவரது முகத்திரையை கிழித்தார் கமல்ஹாசன். மேலும் தான் கேமராக்களுக்கு புதிது என கமலிடம் கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி அதற்கு முன்பே குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களில் நடித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
அம்பலப்படுத்திய கமல்
இதனை கவனித்த கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது, அதையும் கேட்டு ஜூலி கூறிய பொய்களை அம்பலப்படுத்தினார். பிக்பாஸ் வீட்டில் ஜூலி ஆடிய ஆட்டத்தால் அவர் மீது பார்வையாளர்கள் தாக்குதல் நடத்தி விடக்கூடுமோ என்று அஞ்சிய கமல், அவரை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நடிகையான ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜூலியின் பெயர் டேமேஜ் ஆனாலும் சின்னத்திரையில் தொகுப்பாளர் ஆகும் வாய்ப்பு மற்றும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. சில படங்களில் சப்போர்ட்டிங் ரோலிலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார் நடிகை ஜூலி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
காதலர் ஏமாற்றிவிட்டார்
அந்த வகையில் தனது ஆண் நண்பருடன் அவுட்டிங் செல்லும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை ஜூலி போலீஸில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகிவிட்டு தற்போது தனது காதலர் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி புகார் அளித்துள்ளார்.
காதலர் ஏமாற்றி விட்டார்
சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது பரபரப்பு புகார் அளித்திருக்கிறார் ஜூலி. மனீஷ் என்பவர் தன்னை 4 வருடங்கள் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தன்னிடம் இருந்த நகை பணம் பல்சர் பைக் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார் ஜூலி.
திருமணம் செய்து கொள்வதாக கூறி..
அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் மணீஷ் என்பவரும் ஜூலியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட நிலையில் ஜூலியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் இருந்து தங்க நகை இருசக்கர வாகனம் மற்றும் வீட்டுக்கு ஃப்ரிட்ஜ் என 2, 30000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றுள்ளார் மணீஷ்.
Recommended Video
போலீஸ் விசாரணை
4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு தற்போது மதத்தை காரணம் காட்டி தனது பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்று கூறி ஜூலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார் மணீஷ். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜூலிக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்றும் ஜூலி தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஜூலி அளித்த புகாரின் அடிப்படையில் மணீஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் மீது ஜூலி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.