நாரதர் வேலையை ஆரம்பித்த பிக்பாஸ்.. முதல் நாளிலேயே வீட்டுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி ரகளை!
சென்னை: முதல் நாளிலே சண்டை மூட்டிவிடும் வேலையை தொடங்கிவிட்டார் பிக்பாஸ்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளான இன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வித்தியாசமான டாஸ்க்கை கொடுத்து சண்டை மூட்டி விட்டுள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று, முதல் டாஸ்கை கொடுத்தார். அதன்படி ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட்டையும் கனெக்ட் ஆகாதவர்களுக்கு புரோக்கன் ஹார்ட்டையும் கொடுக்க வேண்டும்.

உடைந்த இதயம்
ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் இரண்டு பேருக்கு இதயத்தையும் இரண்டு பேருக்கு உடைந்த இதயத்தையும் கொடுக்க வேண்டும் என்பது பிக்பாஸின் விதி. அதன்படி ஒவ்வொரு ஹவுஸ் மேட்டும் 4 பேரை அழைத்து ஹார்ட்டையும் உடைந்த ஹார்ட்டையும் கொடுத்துக் கொண்டனர்.

ரேகா ரூடு
இதில் ஷிவானி மற்றும் நடிகை ரேகா அதிக புரோக்கன் ஹார்ட்டுகளை பெற்றனர். ரேகா ரொம்பவே ரூடாக இருப்பதாக காரணம் கூறி அவருக்கு ஹவுஸ்மேட்ஸ் உடைந்த ஹார்ட்டுகளை கொடுத்தனர்.

மிங்கிள் ஆகவில்லை
அதேபோல் ஷிவானி மிங்கிள் ஆகவில்லை என்று கூறி அவருக்கும் உடைந்த ஹார்ட்டுகளை கொடுத்தனர். அதிக புரோக்கன் ஹார்ட்டுகளை பெற்றதால் ஷிவானியின் முகமே மாறி போய்விட்டது.

சுரேஷ் சக்கரவர்த்தி
அதே நேரத்தில், புரமோவில் காட்டியப்படியெல்லாம் சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானியிடம் அதிக ரூடாக நடந்து கொள்ளவில்லை. முதல் நாள் நெருக்கமாக பழகிவிட்டு மறுநாள் பேசாமல் அமைதியாக இருந்தது தன்னை காயப்படுத்திவிட்டதாக கூறி புரோக்கன் ஹார்ட்டை கொடுத்தார்.

சிறு சலசலப்பு
ஆனால் பெரும்பாலான ஹவுஸ்மேட்டுகள், ஒருவருக்கொருவர் எந்த கனெக்ட்டும் இல்லை என்பதால் உடைந்த இதயத்தை கொடுப்பதாக கூறியுள்ளனர். இருந்தபோதும் இந்த டாஸ்க்கால் போட்டியாளர்களுக்குள் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











