இந்த வாரம் மட்டுமில்ல.. அடுத்த வாரமும் ஆரிக்குதான் குறி.. ஓபனாக சொல்லிய ஹவுஸ்மேட்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது காட்டப்பட்டது.
இதில் ஆரியைதான் ரம்யா, ரியோ, ஆஜித், ஷிவானி என பலரும் நாமினேட் செய்தது தெரியவந்தது.

ஃபன் டாஸ்க்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் ஃபன் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். மாட்னீயா என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த டாஸ்க்கில் ஒருவர் கையை நீட்டியிருக்க மற்றொருவர் அடிக்க வேண்டும்.

ஆரியும் ரம்யாவும்..
அடித்த நபர் அங்கிருக்கும் சீட்டில் எழுதியுள்ளதற்கு ஏற்ப கேள்வி கேட்பார். அதற்கு அடி வாங்கிய நபர் பதில் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஆரியும் ரம்யாவும் இந்த டாஸ்க்கில் பங்கேற்கிறார்கள்.

அடுத்த வாரமும் ஆரிதான்
இதில் அடி வாங்கும் ரம்யாவிடம் கேள்வி கேட்கிறார் ஆரி. அதாவது அடுத்த வாரம் 2 பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்றால் யாரை நாமினேட் செய்வீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆரி, மற்றும் கேபி என கூறுகிறார் ரம்யா.

உண்மையிலேயே நரி
தொடர்ந்து வரும் பாலாஜி, ஆரியிடம் ஃபினாலேல இருக்கீங்க கூட இருக்கும் மூன்று பேர் யாரா இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு ஆரி சிரித்தப்படியே யோசிக்கிறார். அதற்குள் எழுந்து கத்தும் ரியோ, இவர்தான் உண்மையிலேயே நரி என்கிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.

இன்சல்ட் செய்யும் ரம்யா
இந்த வாரமே ரம்யா ஆரியை தான் நாமினேட் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த வாரத்திற்கும் ஆரியை நாமினேட் செய்வதாக இப்போதே ஸ்கெட்ச் போட்டு குறி வைத்துள்ளார் ரம்யா. ஆரியை பலமுறை ரம்யா இன்சல்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











