Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அவர் படத்தில் நடிக்கணும்ங்கிறது என்னோட கனவு' - யாரைச் சொல்கிறார் பிக்பாஸ் ஹரீஷ்?
Recommended Video
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா இணைந்து நடிக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனது கனவு நிறைவேறிவிட்டது எனக் கூறியுள்ளார் ஹரீஷ்.
கமல்ஹாசன் நடத்திய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது.
ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர். ஜூலி கலைஞர் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகக் களமிறங்கிவிட்டார்.
புதிய படம்
இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யுவன் இசை
ஹரீஷ் - ரைசா நடிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 5-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
|
எனது கனவு
தனது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதை பெருமையோடு பகிர்ந்துள்ளார் படத்தின் நாயகனாகியிருக்கும் ஹரீஷ். ரைசாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார் ஹரீஷ்.
வளர்ந்ததே யுவனின் இசை கேட்டுத்தான்
'நான் யுவனின் இசையைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். அவரது இசையில் உருவாகும் படத்தில் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. இந்தக் கனவு இப்போது நனவாகி இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.