Don't Miss!
- Finance இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் புளூ காலர் வேலைகள்..!!
- Lifestyle இன்று அனுமன் ஜெயந்தி 2024.. இந்த மந்திரத்தை ஜபித்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..!
- News பாஜக இதை எதிர்பார்த்து இருக்காதே! கர்நாடகாவில் வினையாக மாறிய கரும்பு விவசாயி சின்னம்! தள்ளாடிய தாமரை
- Sports சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸின் இறுதி பேச்சு ஆரி மற்றும் பாலாஜி மட்டுமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைத்துவிட்டது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. அடுத்தடுத்து 2 வைல்டு கார்டு கன்டெஸ்டென்ட்ஸ் என மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் ஆரி டைட்டில் வின்னராகி கப்பை தட்டிச் சென்றார்.
கடைசி நிமிடங்கள் இவை..
முன்னதாக தனது குரலால் மட்டுமே போட்டியாளர்களை ஆட்டி வைத்து அசர வைத்து அதட்டி வந்த பிக்பாஸ் தனது கம்பீர குரலும் இறுதியாக பேசி ஓய்வெடுக்க போவதை தனது கடைசி பேச்சில் உருக்கமாக கூறினார். கடைசியாக பிக்பாஸ், ஆரி மற்றும் பாலாஜியிடம் பேசியதாவது, ஆரி, பாலா நீங்கள் இந்த வீட்டில் இருக்கப்போகும் கடைசி நிமிடங்கள் இவை.
பிரிய போகும் இந்த நேரத்தில்..
நீங்கள் கனவுக்குள்ள பார்க்குற ஒரு கனவு மாதிரி இந்த உலகமே லாக்டவுன்ல இருந்தப்போ உங்களுக்கு நீங்களே விதிச்சுக்கிட்ட லாக்டவுன்தான் இந்த 105 நாட்கள். இந்த சவாலை வெற்றிகரமா முடிச்சுட்டு வெளியே போறீங்கங்றது பெருமைக்குரிய விஷயம் என்றால் அது மிகையாகாது. எவ்வளவோ விஷயங்களை மாறி மாறி பதிவு பண்ணிருக்கீங்க. உங்களை விட்டு பிரிய போற இந்த நேரத்துல நீங்க ஏதாவாது சொல்லலாம் என்று கூறினார் பிக்பாஸ்.
நிறைய தோல்விகள்..
இதனைக் கேட்ட ஆரி, பிக்பாஸிடம் பேச வந்தார். ஆனால் எமோஷனலில் வார்தையே வரவில்லை. தொடர்ந்து பேசிய அவர், எப்போது பேச வந்தாலும் தயக்கமே இல்லாமல் பேசுவேன். இப்போ பேச்சே வரல.. வாழ்க்கையில வெற்றிக்காக எல்லாரும் ஓடிட்டுருக்காங்க.. நானும் ஓடினவன்தான்.. நிறைய தோல்விகளை என்னோட வாழ்க்கை பயணத்துல பார்த்திருக்கிறேன்.
என்னையே கேட்டுக்கொண்ட கேள்வி
ஏதாவது ஒரு வெற்றியை பார்க்க மாட்டோமான்னு இருந்தேன். அப்போதான் எனக்கு பிக்பாஸ் பிளாட்ஃபார்ம் கிடைச்சுது.
என்னை எனக்கே காட்டின வீடு இது. துவண்டு போன போதெல்லாம் எழுந்து நிக்க வச்சுது. இந்த விட்டிலேயே நீ சரியா இல்லன்னா சமூகத்துல நீ எப்படி சரியா இருப்ப என்ற கேள்வி இருந்துச்சு. அதையேதான் நானும் கேட்டுக்கிட்டேன். சகபோட்டியாளர்கள் கிட்டேயும் கேட்டுக்கிட்டேன்.
தரையில் விழுந்து சல்யூட்..
நான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்னா அதற்கு என் சகபோட்டியாளர்களும் தான் காரணம். அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு வாழ்க்கை முழுக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்.. என்று கூறிய ஆரி பிக்பாஸ் வீட்டின் தரையில் விழுந்து பிக்பாஸுக்கு சல்யூட் அடித்தார். மனதில் இருந்து இதை சொல்வதாகவும் கூறினார்.
தோல்வி புதுசு இல்ல
அவரை தொடர்ந்து பேசிய பாலாஜி, 5 வருஷத்துக்கு முன்னாடி நான்லாம் எப்படி இந்த இடத்துக்கு போவேன்னு நினைச்சுருந்தேன். எனக்கு தோல்வியும் புதுசு இல்ல வெற்றியும் புதுசு இல்ல. என்னையே எனக்கு காட்டின வீடு இது. உலகத்துக்கும் என்னை காட்டியது. என்ன பண்ணாலும் யாருக்கும் தெரியலையே என்று நினைத்திருந்தேன். நான் நானாகவே இருக்க ஆசைப்பட்டேன்.
அண்ணன் லவ் யூ..
அப்படிதான் இருந்திருக்கிறேன். எனக்கு இழக்க எதுவும் இல்லை என்று நினைத்துதான் விளையாடினேன். நிறைய லவ் வெளியே கெய்ன் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன். உங்க டீம்க்கு நன்றி. எல்லாருக்கும் நன்றி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு. தோன்றுவதைதான் பேசுவேன். எனக்கும் ஓட்டுபோட்டு இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார்கள் நன்றி என்ற பாலாஜி, பிக்பாஸை அண்ணன் லவ் யூ மிஸ் யூ.. உங்க
வாய்ஸ் பிடிக்கும்.. என்னை போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. என்று கூறி முடித்தார்.
சளைச்சவங்க இல்லை..
தொடர்ந்து பேசிய பிக்பாஸ், ஆரி பாலா இந்த வீட்டில் நீங்கள் இருந்த 15 வாரங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதிதான். ஆனால் இங்கு நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் இருவரும் இத்தனை நாட்கள் முழுமையான பங்களிப்பை கொடுத்து ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை என்பதை நிரூபிச்சுருக்கீங்க.
உங்களுடன் வாழ்ந்த இந்த குரல்..
உங்களை கொண்டாட இந்த உலகமே காத்திருக்கிறது. இதுவரை இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் என் மனசுல இருக்காங்க.. அந்த வகையில் என் மனசுல பிரிக்க முடியாத அங்கமா நீங்களும் ஆயிட்டிங்க. நீங்க போன பிறகு நீங்க ஆடி பாடி சண்டை போட்டு வாழ்ந்த இந்த வீடு அமைதியாயிடும்.. இதுவரை குருநாதராய் அண்ணனாய் உங்களை ஆட்டிவைத்து அரவணைத்து தட்டிக்கொடுத்து உங்களோட உணர்வா உறவா வாழ்ந்த இந்த குரல் இறுதியா உங்கக்கிட்டே இருந்து விடைபெற போகுது.. என்று கலங்க வைத்தார்.
சிஷ்யா ஆரி..
இறுதியாக ஆரியை சிஷ்யா என்று அழைத்த பிக்பாஸ், உங்க கருத்துக்களை மக்களுக்கு கொண்டு போய் சேருங்க. உங்களுடைய கருத்துக்கள் பல கோடி பேரை சேர்ந்திருக்கு என்று ஆரிக்கு இறுதியாக அறிவுரை கூறினார். இதேபோல்
பாலாஜியிடம் பேசிய பிக்பாஸ், தம்பி இனி உங்களுக்கு யாரும் இல்லன்னு சொல்லாதீங்க.. என்னைக்கு இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தீங்களோ அப்போவே நான் உட்பட எல்லாரும் உங்களின் குடும்பம் தான் என்ற பிக்பாஸ்.. இருவரின்
வாழ்க்கைக்கும் ஆல் த பெஸ்ட் கூறி விடை பெற்றார்.