Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சிவனேனு இருக்கும் சிம்புவை வம்புக்கு இழுக்கும் பிக்பாஸ்!
சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
பலர் கலந்துகொண்டு பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கின்றன.
இறுதியாகத் தற்போது நிகழ்ச்சியில் 5 பேர் உள்ளனர். இவ்வார நடுவில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு 4 போட்டியாளர்கள் தான் இருப்பார்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் ரஜினி, சிம்பு :
இந்த நிலையில் இன்று புதிதாக வந்த பிக்பாஸ் ப்ரொமோவில் ஆரவ் ரஜினியாகவும், பிந்து மாதவி நயன்தாராவாகவும், ஹரீஷ் சிம்புவாகவும் நடிக்கின்றனர்.
ரஜினியாக நடிக்கும் ஆரவ் :
ரஜினிகாந்த்தின் மேனரிசங்களைப் போலவே ஆரவ் செய்துகாட்டி வருகிறார். ரஜினியைப் போல வேகமாக நடந்து வந்து அவரைப் போலவே பேசுகிறார். நயந்தாராவாக நடிக்கும் பிந்து மாதவியிடம் 'நாம கடைசியா சந்திரமுகி பண்ணோம்ல... அதுக்கப்புறம் சேர்ந்து படம் பண்ணலையா?' எனக் கேட்கிறார்.
தொட்டுப் பேசாதப்பா :
சிம்புவாக நடிக்கும் ஹரீஷ் பிந்து மாதவி தோளில் கைபோட, 'தொட்டுப் பேசாதப்பா... ரொம்பத் தப்பு' எனச் சொல்கிறார் ரஜினியாக நடிக்கும் ஆரவ். சிம்புவைப் போலவே பேசும் ஹரீஷ் பிக்பாஸ் வீட்டில் நயன்தாராவிடம் பேசிவிட்டு ஹன்சிகாவைத் தேடுகிறார்.
சிம்பு பாவம் :
இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள், 'சிவனேனு இருக்குறவரை ஏம்ப்பா கலாய்க்குறீங்க' எனக் கேட்டுவருகிறார்கள். நிஜமாகவே அவர் இந்த வீட்டிக்குள் சிறப்பு விருந்தினராக வந்தால் நன்றாக இருக்குமே என்றும் சிலர் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.