Don't Miss!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'வெளியே பாக்குறவங்க செருப்பால அடிப்பாங்க' ஆவேசமான அறந்தாங்கி நிஷா.. அனல் பறக்கும் பட்டிமன்றம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் பட்டி மன்றம் நடப்பது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாய் நாடா இல்ல காடா டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரளயமே வெடித்தது. விளையாட்டு வினையான கணக்காய் சனம் ஷெட்டியிடம் சிக்கி சின்னாப்பின்னமானார் சுரேஷ் சக்கரவர்த்தி.
வீட்டுக்கே போகிறேன்
போடா வாடா என்றும் யோவ் நீ போ வா என்றும் படு மோசமாக சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் திட்டி தீர்த்தார். சனம் ஷெட்டி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். சனம் போட்ட போட்டில் நான் வீட்டுக்கே போகிறேன் என கதறிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.
பட்டி மன்றம்
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் பட்டிமன்றம் நடப்பது தெரியவந்துள்ளது. பட்டிமன்றத்தின் டைட்டிலை படிக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதன்படி பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம், பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடக்கிறது.
விளாசிய அனிதா
இதில் முதலாவதாக பேசும் வேல்முருகன், இந்த குடும்பம் இருந்தால்தான் விளையாட்டு, விளையாட்டு இருந்தால் தான் ஜெயிப்போம் என கூறுகிறார். அவரை தொடர்ந்து பேசும் அனிதா. அன்பு, எல்லாரும் ஒரு தாய் பிள்ளைகள் என பேசுனீங்கள்ல அன்னைக்கு எல்லாரும் குத்தும்போது ஏன் அழுதீங்க என்று கேட்கிறார்.
புறணி பேசுவது அழகு
தொடர்ந்து பேசும் ரியோ, எல்லாரும் நம்முடைய தேவைக்காகதான் இந்த போட்டிக்களத்துக்கு வந்தோம் என்கிறார். அடுத்ததாக பேசும் அறந்தாங்கி நிஷா, புர்ஃபெக்ட் பட்டி மன்ற பேச்சாளர் போன்றே புறணி பேசுவது அழகுங்க என்ற டோனுடன் ஆரம்பிக்கிறார்.
செருப்பால அடிப்பாங்க
தொடர்ந்து பேசும் அவர், ஒருவருடைய உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும் போதுதான் அந்த புறணி அசிங்கம். அந்த புறணியை வெளியே இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க என ஆவேசமாக பேசுகிறார். நிஷா பேசும் போது ஹவுஸ்மேட்ஸ்களின் முகத்தில் ஈயாடவில்லை. இப்படியாக உள்ளது பிக்பாஸின் இன்றைய இரண்டாவது புரமோ.