Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தீபாவளி பார்ட்டியை யாருடன் கொண்டாடினார்? வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகை ஜெயஸ்ரீ தீபாவளி பார்ட்டியை மகாலட்சுமியின் கணவருடன்தான் கொண்டாடினாரா என்பது குறித்த தகவலை பிக்பாஸ் பிரபல நடிகை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் குடும்பப் பிரச்சனைதான் இப்போது தமிழ் சின்னத்திரை உலகின் ஹாட் டாப்பிக். தனது கணவரான ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டார் நடிகை ஜெயஸ்ரீ. தன்னை அடித்து துன்புறுத்துவதாக வெளியான புகாரை தொடர்ந்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.
லவ் யூ ஸோ மச் ... மாலத்தீவில் ஆர்யா - சாயிஷா ரொமான்ஸ்!
பார்ட்டிகளில் சந்திப்பு
பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஈஸ்வர், தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும்தான் தொடர்பு உள்ளது. இருவரும் ஒன்றாக பார்ட்டிகளில் சந்தித்து கொள்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
குடித்து விட்டு ஆட்டம்
தீபாவளி பார்ட்டியில் மகாலட்சுமியின் கணவருடன் சென்று குடித்து விட்டு ஆட்டம் போட்டதாகவும் கூறினார். அவர் கூறியபடிதான் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஜெயஸ்ரீ நடந்துகொள்கிறார் என்றும் ஈஸ்வர் குற்றம்சாட்டினார்.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு
சீரியல் நடிகை மகாலட்சுமியும் இதே குற்றச்சாட்டைதான் கூறினார். ஆனால் மகாலட்சுமியின் கணவர் அனிலும் ஜெயஸ்ரீயும் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.
பிக்பாஸ் பிரபலம் பதில்
இந்நிலையில் ஜெயஸ்ரீயை தீபாவளி பார்ட்டிக்கு யார் அழைத்தது? யாருடன் அவர் கலந்துகொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட ரேஷ்மா தற்போது பேசியிருக்கிறார்.
அண்ணன் தங்கை உறவு
அதாவது, தீபாவளிக்கு ஜெயஸ்ரீயை பார்ட்டிக்கு அழைத்தது தான்தான் என பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா கூறியுள்ளார். அதோடு,ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவருக்கு இடையே இருப்பது ஒரு அண்ணன், தங்கை உறவு மட்டும்தான் என்றும் அவர் உறுதியாக கூறினார்,
ரேஷ்மா விளக்கம்
அவர்களின் உறவை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் ரேஷ்மா தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னை மகாலட்சுமியின் கணவருடன் ஒப்பிட்டு பேசிய தனது கணவர் ஈஸ்வரை சும்மா விடப்போவதில்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.