Don't Miss!
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என்னை ஏன் வெளியே அனுப்பினாங்கன்னே தெரியல.. பாலாஜி பத்தி நான் என்ன சொல்றது.. பிக்பாஸ் பிரபலம் அதிரடி!
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான சரவணன், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
50 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கி வருபவர் பாலாஜி முருகதாஸ்.
ஹீரோயினான குட்டி நயன்.. பிறந்தநாளில் ஃபிரண்ட்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. தீயாய் பரவும் வீடியோ!
அட்ஜெஸ்ட்மெண்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சக போட்டியாளரான சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசினார். சனம் ஷெட்டி மிஸ் சவுத் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றதை, அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் பெற்றார் என இழிவாக பேசினார்.
வெளிப்பட்ட வில்லங்கம்
இந்த விஷயத்தை விஜய் டிவி ஒளிபரப்பாத நிலையில் அதன் பிறகு ஒளிபரப்பான எபிசோடுகளில் கோர்ட் டாஸ்க்கின் போது இந்த விவகாரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலாஜியை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
அவளே இவளே என..
தொடர்ந்து சனம் ஷெட்டியை தறுதலை தறுதலை என்றழைத்த பாலாஜி முருகதாஸ், அவரை அவளே இவளே என்று தரக்குறைவாக பேசினார். மேலும் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் பீஜன்ட் என்றும் கூறினார்.
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு
பாலாஜி தொடர்ந்து சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசியதை பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே தங்களின் அழகிப்போட்டியை டுபாக்கூர் ஆழகிப் போட்டி என்று கூறியதற்காக அதன் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் பாலாஜியிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.
எதையாவது நீட்டி பேசுவேன்
பெண் போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆண் போட்டியாளர்களிடமும் வம்பிழுத்து வருகிறார். ஆரியிடம் வேற எதையாது நீட்டி பேசுவேன் என்று கூறியதோ காலையும் நீட்டி பேசினார். அவரது நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முத்தம் கொடுத்த பாலாஜி
மேலும் ஷிவானியை தனது ஃபிரண்ட் என கூறி வரும் பாலாஜி, அவரை தடவுவது, இடுப்பில் கை வைப்பது, மாசாஜ் செய்ய சொல்வது, ஊட்டி விட சொல்வது என அவரிடம் எல்லை மீறி வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் ஷிவானிக்கு பிக்பாஸ் வீட்டில் முத்தம் கொடுத்தார் என்று ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது.
சரவணன் வெளியேற்றம்
இந்நிலையில் கடந்த சீசனில் சிறுவயதில் பேருந்தில் செல்லும் போது பெண்களை இடித்ததாக கூறிய சரவணன், அதற்காக மன்னிப்பு கேட்ட போதும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். பெரும் குற்றவாளியை போல் அவரை கன்ஃபெஷன் ரூமில் இருந்தப்படியே கண்களை கட்டி அழைத்து சென்றனர்.
Recommended Video
எனக்கே தெரியவில்லை
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் சரவணன்.
அப்போது பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் பாலாஜியை ஏன் வெளியேற்றவில்லை என சரவணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள சரவணன் என்னை எதற்காக வெளியில் அனுப்பினார்கள் என்பது எனக்கே தெரியாது என கூறியுள்ளார்.
பதில் சொல் வேண்டும்
மேலும், நீங்கள் தற்போது பாலாஜி பற்றி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி டீமும் கமல் சாரும் தான் பதில் அளிக்க வேண்டும் சரவணன் கூறியுள்ளார். இளமை பருவத்தில் செய்த தவறை இப்போது சொன்னதற்காக சரவணன் மீது நடவடிக்கை எடுத்த பிக்பாஸ் குழு இப்போது தவறு செய்யும் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.