Don't Miss!
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கடந்த வாரம் தொடங்கிய இந்த டாஸ்க்கால் அந்த வாரம் முழுக்கவுமே பெரும் பரபப்பாக இருந்தது.
அனல் பறந்த பார்ட் 2
கடந்த வாரத்தில் இந்த டாஸ்க்கை முடிக்க முடியாமல் போனதால் நேற்று முதல் மீண்டும் இதனை பார்ட் 2வை தொடங்கினர்.
இதில் பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையேயான உரையாடலால் அனல் பறந்தது.
காய்ச்சி எடுத்த அனிதா
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் ரியோவுக்கு கால் செய்த அனிதா, அவர் முகமூடி போட்டுக்கொண்டு நல்லவர் போல் நடிப்பதாக கூறி காய்ச்சி எடுத்தார். அனிதாவின் கேள்விகளால் செம டென்ஷனானார் ரியோ.
சண்டை போடும் ஹவுஸ்மேட்ஸ்
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதன் மூலம் இன்றுடன் கால் செண்டர் டாஸ்க் நிறைவடைவது தெரியவந்துள்ளது. இந்த புரமோவில் கார்டன் ஏரியாவில் ரேங்குக்காக ஹவுஸ்மேட்ஸ் சண்டை போட்டு கொள்கின்றனர்.
டாஸ்க்கில் யார் பெஸ்ட்?
அதாவது நடந்து முடிந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் தங்களின் முழு முயற்சியையும் வெளிக்காட்டி, டாஸ்க்கை முறையாக செய்த நபர்கள், முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் டாஸ்க்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் 1 லிருந்து 13 வரை ரேங்க் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார் பிக்பாஸ்.
போட்டி போடும் போட்டியாளர்கள்
இதற்காக ஒன்று முதல் 13 வரை நம்பர்கள் பொருத்தப்பட்ட பெடஸ்டன்ட்டுகள் கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்க போட்டியாளர்கள் நீ, நான் என போட்டி போடுகிறார்கள்.
புகையும் பிரச்சனை
ஒரு பக்கம் பாலாஜி, ஒரு பக்கம் சனம் ஷெட்டி, கேபி, அர்ச்சனா, ரம்யா என அனைவரும் போட்டி போட்டு ஆர்க்யூ செய்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமாகிறது. ஏற்கனவே ஒரு முறை ரேங்க் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது எழுந்த பிரச்சனையே இன்னும் பிக்பாஸ் வீட்டில் புகைந்து கொண்டிருக்கிறது.
பெரும் ரணகளம்
இதில் மீண்டும் இப்படி ஒரு தரம் பிரிக்கும் டாஸ்க்கை கொடுத்து பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கொளுத்திப் போட்டுள்ளார். இன்று கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீட்டில் பெரும் ரணகளம் ஏற்படும் என தெரிகிறது.