Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எனக்கு அந்த மாதிரி படங்கள் பண்ணதான் ஆசை.. ஓபனாக பேசிய பிக்பாஸ் ஷிவானி!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாரயணன் தனக்கு எந்த மாதிரியான படங்களில் நடிக்க விருப்பம் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனது சினிமா கனவு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
சீரியல் கமிட்மெண்ட்
அவர் பேசியிருப்பதாவது, எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும், முந்தைய சீசன்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். கடந்த சீசனிலேயே நான் பங்கேற்க வேண்டியது, ஆனால் எனக்கிருந்த டிவி சீரியல் கமிட்மெண்ட்ஸால் என்னால் பங்கேற்க முடியாமல் போனது.
பல அனுபவங்கள்..
இம்முறை அவற்றில் இருந்து பிரேக் எடுக்க விரும்பியதால், அந்த நேரத்தை பிக்பாஸில் செலவழிக்கலாம் என நினைத்தேன். பிக்பாஸ் ஷோ எனக்கு பல அனுபவங்களை கொடுத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த 90 நாட்களுட் ஃபன் மற்றும் எண்டெர்டெய்ன்மென்ட்தான். இதன் மூலம் எனக்கு நல்ல நண்பர்களும் கிடைத்துள்ளார்கள்.
என்னுடைய மந்திரம்
எனக்கு மற்றவர்களிடம் பழக நாட்கள் ஆகும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் மாறிவிட்டதாக நினைக்கிறேன். எனக்கு எப்போதும் ஹேப்பியாக இருக்க வேண்டும். குட்டி ஸ்டோரி பாடலில் வருவது போல் லைஃப் இஸ் ஷார்ட்.. ஆகையால் என்னுடைய மந்திரம் எப்போதும் ஹேப்பியாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அம்மாதான் எல்லாமும்
என் அம்மாதான் எனக்கு எல்லாமும். பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த சில விஷயங்களால் என் அம்மா ரொம்பவே காயப்பட்டுள்ளார் என்பதை உணர்ந்தேன். என் அம்மா எனக்கு எப்போதும் நல்லதுதான் நினைப்பார். என்னை நான் நிரூபிக்க வேண்டும் என்றுதான் கூறுவார். அதனால் நான் செய்ததை யாரிடமும் நியாயப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நடிக்க பிடிக்கும்
எனக்கு நடிப்பு பிடிக்கும் நடிக்க பிடிக்கும். எனக்கு சினிமா துறைக்குள் செல்ல விருப்பம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு டெலிவிஷனில் வாய்ப்பு கிடைத்தது. நான் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது எனக்கு 18 வயதுதான்.
அந்த மாதிரி படங்கள்
டிவியில் நடித்து விட்டு பின்னர் படங்களில் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். தற்போது எனக்கு 3 வாய்ப்புகள் கிடைத்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். எனக்கு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கதான் ஆசை.
அதெல்லாம் மேட்டரே இல்லை
ஆனால் நான் அதற்கு சிறு பெண் என்று நினைக்கிறேன். தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும். க்யூட், சீரியஸ் எல்லாம் மேட்டரே இல்லை. நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை ஷிவானி நாராயணன் தெரிவித்துள்ளார்.