விறுவிறுப்பாகும் பிக் பாஸ்.. போட்டிக் களமா? காதல் களமா? குட்டி ரவுண்ட் அப்!
சென்னை: தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக காதலை கையில் எடுத்துள்ளனரோ என்று நினைக்கதோன்றுகிறது.
ஆரவ் - ஓவியா:

அனைத்து தமிழ் மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார் ஓவியா. சரியாக சொல்ல போனால் படங்களை விட பிக் பாஸ் பார்த்து ஓவியா ஆர்மியில் இணைந்தவர்களே அதிகம். ஆரவ் மீது கொண்ட காதலால் மன அழுத்தம் அதிகமாகி வெளியேறினார். ஆரவின் மருத்துவ முத்தம் பரவலாக பேசப்பட்டது. ஆரவே அந்த சீசனின் வெற்றியாளர்.
மகத்- யஷிகா & ஷாரிக்-ஐஸ்வர்யா:

இரண்டாவது சீசனில் நடந்த காதல் விளையாட்டுகளுக்கு அளவே இல்லை. ஷாரிக்-ஐஸ்வர்யா ஜோடி சின்ன பையன் & பெரிய பொண்ணு ஜோடி. மகத்- யஷிகா இதில் மகத்தின் காதலி நெட்டில் யாஷிகாவை கழுவி ஊத்தியது வேறு கதை. மகத்தின் அட்டூழியங்கள் வீடியோக்களாக கொட்டி கிடக்கிறது.
கவின்- சாக்ஷி- லாஸ்லியா:

அது முக்கோண காதல் கதை என்ற பிம்பம் சென்று நேற்று சக்களத்த சண்டையாக உறுமாறியது. ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி அடித்துக் கொண்டனர். மன்னிப்பு கேட்கிறேன் என்று லாஸ்லியா அனைவரையும் உட்கார வைத்து "அபிராமி தவிர யாரும் என்கிட்ட கதைக்காதிங்க" என்று அவர் ஆர்மி ரசிகர்களையும் கடுப்பேத்தி விட்டார். மிகவும் ஆட்டிடூட்யூட் காட்டி வருகிறார். ஆனாலும் மேக் அப்பிற்கு குறை இல்லை (இதை நோட் பன்னிங்களா மக்களே?) சாக்ஷியோ அழுக்காச்சி நாடகம் நடத்துகிறார். அனைவரையும் கடுப்பேத்திய உசுப்பேத்திய
கவின் தன்னை வெளியேற்ற சொல்லி பிக் பாஸிடம் கேட்கிறார். இந்த காதல் விளையாட்டுக்கள் முடிவுக்கு வந்தா சரி!


Click it and Unblock the Notifications











