Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஓவர் ஆட்டிடியூட் காட்டும் பிரியங்கா சிபியுடன் மோதல்... போறப்போக்க பார்த்தா இந்த வாரம் இவங்கதான் போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கனா காணும் காலங்கள் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
உறவின் பெருமையை கூறும் படம் 'ராஜவம்சம்'… நடிகை ரேகா பேச்சு !
இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பள்ளி மாணவ மாணவிகளாக மாறியுள்ளனர். சிபி பிக்பாஸ் வீட்டின் ஆசிரியராக இருப்பது தெரிகிறது.
அமீர் வைல்டு கார்டு என்ட்ரி
இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் டான்ஸ் மாஸ்டர் அமீரும் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ளார். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவில் அபிஷேக், பிரியங்கா மற்றும் தாமரை செல்வியை கொம்பு சீவி விடுவது போன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
சிபியுடன் தகராறு
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா ஆசிரியரான சிபியிடம் தகராறு செய்துவிட்டு கார்டன் ஏரியாவில் வந்து அமர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கார்டன் ஏரியாவில் படுத்திருக்கிறார் பிரியங்கா.
நாம ஏதும் பண்ண முடியாது
அப்போது அங்கு வரும் வருண் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு மன்னிப்பு கடிதம் கேட்கிறார் என்று வருணிடம் பதில் கூறுகிறார். அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருக்கும் சிபி, அவங்க அடம் பிடிச்சு வெளியேதான் இருப்பேன் என்று கூறினால் நாம் ஒன்றும் பண்ண முடியாது என்கிறார்.
குச்சியை யூஸ் பண்ண மாட்டேன்
தொடர்ந்து பேசும் சிபி ஒரு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு உள்ளே வருமாறு கூறிவிட்டேன் என்கிறார். பின்னர் கார்டன் ஏரியாவில் அபிஷேக்கிடம் பேசும் பிரியங்கா, குச்சியை யூஸ் பண்ண மாட்டேன்னு முதல்ல சொல்ல சொல்லு என்று கூறுகிறார் பிரியங்கா.
பிரியங்காவுக்கு பனீஷ்மென்ட்
அப்போது பேசும் வருண், சாரின்னு எழுதி கொடுக்குறதுல என்ன இருக்கு என்று கேட்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் பிரியங்கா. ஆசிரியரான சிபி, பிரியங்காவுக்கு பனீஷ்மென்ட் கொடுப்பதற்காக கைகளில் இரண்டு டீ கப்புகளை வைத்துக் கொண்டு நிற்கும்படி கூறுகிறார்.
டீ கப்புகளை உடைத்த பிரியங்கா
அதற்கு தான் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு செய்யவில்லை என்று கூறும் பிரியங்கா கையில் உள்ள டீ கப்பை அப்படியே கவிழ்த்து உடைக்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ. இந்த புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள், போறப்போக்கை பார்த்தால் இந்த வாரம் பிரியங்காதான் வெளியேறுவார் போல் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.