தாத்தா நாடகம் போட்டாதான் ஒரு வேளை சாப்பாடு.. ஐசரி வருண் கதையை கேட்டு தூங்கி வழிந்த அபிஷேக்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் வருண் கதையை கேட்டு அபிஷேக் ராஜா கொட்டாவி விட்டு தூங்கி வழிந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலும் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கான கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் வருண் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார். பழம் பெரும் நடிகரான ஐசரி வேலனின் பேரன் தான் வருண்.

தாத்தா நடிச்சாதான் ஒருவேளை சாப்பாடு

தாத்தா நடிச்சாதான் ஒருவேளை சாப்பாடு

அவர் பேசியதாவது, எங்க தாத்தா ஐசரி வேலன். அவர் ஒரு
மேடை நாடகக் கலைஞர். எம்ஜிஆருக்காக நிறைய பிரச்சாரம் செய்தார். நிறைய அரசியல் கூட்டத்திற்காக நாடகம் போட்டுள்ளார். அவர் நாடகத்தில் நடித்து விட்டு சம்பாதித்து கொடுக்கும் காசில்தான் எங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு

நடிக்கும் போதே இறந்துட்டார்

நடிக்கும் போதே இறந்துட்டார்

சில படங்களிலும் நடித்துள்ளார். அவர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இறந்துவிட்டார். அப்போது பத்திரிக்கைகளில் எல்லாம் மேடை நாடகத்தில் அடுத்த சீனுக்காக காத்திருந்தவரின் சீன் முடிந்தது என்றெல்லாம் போட்டார்கள். 7 லட்சம் கடன் ஆனது. அப்போது தாத்தா எம்ஜிஆர் கூட இருந்ததால் எம்ஜிஆரிடம் கேட்டார்கள்.

ஒன் மேன் ஆர்மியாக உழைச்சு

ஒன் மேன் ஆர்மியாக உழைச்சு

எம்ஜிஆர் உதவி செய்தார். எம்ஜிஆர் கூட இருந்ததாலேயா என்னன்னு தெரியல அவரோட ஜீன் மாதிரி எங்க மாமா ஐசரி கணேஷ் ஒன் மேன் ஆர்மியாக உழைச்சு முன்னுக்கு வந்தார். என்னை பார்க்குறவங்க எல்லாம் நான் தங்க ஸ்பூனோட பிறந்தவன். எனக்கு என்ன கவலைன்னு கேட்பாங்க.. ஆனா நான் கேட்டதை எதுவும் எங்க வீட்டுல வாங்கி கொடுத்ததில்லை.

நான் தானாக வளர வேண்டும்

நான் தானாக வளர வேண்டும்

ஒரு ரூபாய் என்றாலும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது என செலவு செய்ய மாட்டார்கள். நான் தானாக வளர வேண்டும், சினிமாவில் நல்லா வரவேண்டும் என்று 10ஆம் வகுப்பிலேயே ஆசை வந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

Recommended Video

Vishal என் மகன் என்பதில் எனக்கு பெருமை | Producer G. K. Reddy Exclusive | Filmibeat Tamil
தூங்கி வழிந்தார் அபிஷேக் ராஜா

தூங்கி வழிந்தார் அபிஷேக் ராஜா

கடைசி வரைக்கும் கத்துக்கிட்டே இருப்பேன். தலைவா படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தேன். கிடைக்கும் கதாப்பாத்திரங்களில் நல்லா செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. என் கேரக்டர் என்னன்னு காட்டதான் வந்தேன். இவ்வாறு வருண் கூறினார். மேலும் தனக்கு இந்த லைக், டிஸ்லைக், ஹார்ட்டெல்லாம் விஷயமே இல்லை என்றும் கூறினார். வருணின் கதையை கேட்டு கொட்டாவி விட்டு தூங்கி வழிந்தார் அபிஷேக் ராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X