Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆங்ரி பர்டான அக்ஷரா... பூந்தொட்டியை உடைத்து.. நாய் மாதிரி முடியாது.. மிரண்டுபோன ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஆங்ரி பர்டான அக்ஷரா பூந்தொட்டிகளையெல்லாம் உடைத்து ருத்தாண்டவம் ஆடியதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் மிரண்டு போயினர்.
பிக்பாஸ் வீட்டில் இன்றும் பள்ளிக்கூட டாஸ்க்கே தொடர்ந்தது. இதில் முதல் ஆளாக வார்டன் சிபியிடம் பனீஷ்மென்ட் வாங்கினார் அக்ஷரா ரெட்டி.
கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்
வகுப்பு நேரத்தில் பாட்டுப்பாடிக் கொண்டிருந்ததால் அவருக்கு 50 தோப்புக்கரணம் போடும் பனீஷ்மெண்ட் கொடுத்தார் போர்டிங் ஸ்கூல் வார்டன் சிபி.
வேண்டா வெறுப்பாக
இதனை தொடர்ந்து தமிழ் ஆசிரியரான ராஜுவிடம் அக்ஷராவுக்கு 5 திருக்குறள் கற்றுக்கொடுக்கும்படி கூறினார் சிபி. இதனை தொடர்ந்து ராஜு, அக்ஷராவுக்கு திருக்குறள் வகுப்பு எடுத்தார். ஆனால் அப்போதே குளிக்கவேண்டும் என்று கூறியப்படி வேண்டா வெறுப்பாக கற்றுக்கொண்டார் அக்ஷரா.
சீக்கிரம் வாங்க...
ராஜு பின்னர் கற்றுக்கொள்ளலாம் என்று கூறிய பிறகும் கற்றுக்கொள்கிறேன் என கூறி கற்றுக்கொண்டார். சிபி சாப்பிட்டு வந்து சொல்லாம் என்று கூறி அனுப்பினார். அப்போது ஸ்க்ர்ட்டை ஸ்டீம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு ஓகே சீக்கிரம் வாங்க டைம் ஆகுது என்றார் சிபி.
பூந்தொட்டியெல்லாம் தட்டிவிட்டு
அதற்கு கடுமையாக கோபப்பட்ட அக்ஷரா, எதுவுமே பண்ண முடியாது. எப்போதும் டாஸ்க்கை மண்டையிலேயே வச்சுட்டு இருக்குறதா என கேட்டு கத்திவிட்டு பாத்ரூம் ஏரியாவுக்கு சென்றார். பின்னர் கையில் இருந்த டிரெஸை தூக்கி எறிந்த அக்ஷரா, அங்கிருந்த பூந்தொட்டியெல்லாம் தட்டிவிட்டு உடைத்தார்.
அறிவு இருக்கா இல்லையா?
இதனை தொடர்ந்து சமாதானம் செய்ய சென்ற அபினய் வருண், அண்ணாச்சி என அனைவரிடமும் கத்தி தீர்த்தார். நான் அடிமை இல்லை, நான் என்னவோ இங்கு, அவர்களும் அதுதான். திருக்குறள் எழுத முடியாது என்று சொல்லியும் எழுது எழுது என்று அறிவில்லாமல் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா என்று கேட்டு கத்தினார்.
நாய் மாதிரி இருக்க முடியாது
என் டிரெஸ ஸ்டீம் பண்ண சொல்ல நீ யாரு? காமன் சென்ஸ் இல்லையா என சுயரூபத்தை காட்டினார். அப்போது அங்கு வந்த சிபியிடம் என்கிட்ட பேசாதே, உன் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என படுமோசமாக கத்தினார் அக்ஷரா. இதேபோல் ராஜுவிடமும் கத்திய அக்ஷரா, ஓவர் பண்றீங்க.. உங்களுக்கெல்லாம் அறிவு இல்லையா? இங்க நாய் மாதிரி எல்லாம் இருக்க முடியாது. நான் பிக்பாஸிடம் பேசி கொள்கிறேன் என்று வாய்க்கு வந்தப்படி கத்தி தீர்த்தார். அக்ஷரா கத்தியதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் மிரண்டு போய்விட்டனர்.