Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
சிக்கலில் பிக்பாஸ்... நமீதா வெளியேற இதுதான் காரணமா... தீயாய் பரவும் பகீர் தகவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் என புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ சீசன் 5 நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் பங்கேற்றார். பல்வேறு அழகி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் கூறி கதறினார் நமீதா மாரிமுத்து. தன் குடும்பத்தினரே தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததையும் தான் பட்ட பாட்டையும் கூறினார்.
நமீதா வெளியேறியதற்கு தாமரை தான் காரணமா... புதிதாக கிளம்பிய சர்ச்சை
நீங்க மாறுங்க முதல்ல
திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாகவும் பிச்சை எடுக்கவும் காரணம் அவர்களின் பெற்றோர்தான் என்றும் கூறிய நமீதா, நீங்க மாறுங்க முதல்ல என்று கூறி கண்ணீர்விட்டார். நமீதாவின் இந்த பேச்சைக் கேட்டு பலரும் கண்ணீர் விட்டனர்.
வெளியேறிய நமீதா மாரிமுத்து
ஒரே நாளில் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன் தினம் நமீதா மாரிமுத்து வெளியேறினார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் ரகளை
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் என்ன என்று தெரியாமலும் குழம்பி வந்தனர். அதேநேரத்தில் பிக்பாஸ் வீட்டில் நமீதா மாரிமுத்து ரகளையில் ஈடுபட்டதாகவும் சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பொருட்களை எல்லாம் உடைத்ததாகவும் கூறப்பட்டது.
உடல் நிலை சரியில்லை
இதன் காரணமாக ரெட் கார்டு கொடுத்து நமீதா மாரிமுத்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் நமீதா மாரிமுத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
நமீதா மாரிமுத்துவுக்கு கொரோனா
இந்நிலையில் நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் இதுதான் என ஒரு தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நமீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல்
பிக்பாஸ் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் நமீதா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களுக்கு பிறகு அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் கூறப்படுகிறது. நமீதா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உண்மை என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடருவதில் பெரும் சிக்கல் வரும்.
விளக்கம் அளித்தால் உண்மை தெரியவரும்
காரணம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் நிகழ்ச்சி தொடருவது சிக்கலாகி விடும். ஆகையால் நமீதா மாரிமுத்துவுக்கு என்ன ஆனது என்பது குறித்து அவர் தரப்பில் இருந்தோ அல்லது விஜய் டிவி தரப்பில் இருந்தோ தெரிவித்தால்தான் உண்மை தெரியவரும்.