விதிகளை மீறி எலிமினேஷன் குறித்து ரகசிய பேச்சு.. வருண் வந்ததும் டாப்பிக்கை மாற்றிய பிரியங்கா!
சென்னை: பார்ப்பவரெல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு அழகான பெண் மனைவியாக வரவேண்டும் என பிரியங்காவிடம் கூறியுள்ளார் நிரூப்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட் தொடங்கும் போதே கமல் பாடலுடன் தொடங்கியது. சிங்கார வேலன் படத்தில் இடம்பெற்ற என்னுடைய ஆளு மக்கர் பண்ணாதே என்ற வேக் அப் பாடலுக்கு ஆட்டம் போட்டனர் ஹவுஸ் மேட்ஸ்.
அதனை தொடர்ந்து கிச்சனில் கிச்சன் டீம் சமைத்துக் கொண்டிருக்க, அவர்களை போய் குளித்துவிட்டு வருமாறு கூறினார் தாமரை.

என்னையே மிரட்டுறீங்களா?
ஆனால் ஸ்ருதியும் பாவனியும் நாங்கள் சமைத்துக் கொண்டிருக்கிறோம், நீங்கள் போய் குளிங்கள் என்றனர். இதனைக் கேட்ட வீட்டின் கேப்டனான தாமரை இதையெல்லாம் நீங்கள் சொல்லாதீர்கள், என்னையே மிரட்டுறீங்க என்று அவர்களில் கேப்டனுக்கான கெத்தை காட்டினார்.

கேமராவுக்கு தெரியாமல்
அதனை தொடர்ந்து பெட் ரூம்முக்குள் பிரியங்காவும் நிரூப்பும் பேசிக் கொண்டிருந்தனர். ரொம்பவே ரகசியமாக கேமரா அவர்களை ஃபோகஸ் செய்யாதப்படி மறைந்து பேசுவது புரியாதப்படியும் கையால் எழுதியும் காட்டி பேசினர். எலிமினேஷன் குறித்தே அவர்கள் பேசியதாக தெரிகிறது.

டாப்பிக்கை மாற்றி
எலிமினேஷனுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் யார் வெளியே செல்லப் போகிறார்கள் என்பதையே ரகசியமாக பேசியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து வருண் உள்ளே வர, பிரியங்கா மேட்ரிமோனி என டாப்பிக்கை மாற்றினார் பிரியங்கா.

எந்த மாதிரயான பொண்ணு வேண்டும்
தொடர்ந்து தான் மேட்ரிமோனி தொடங்கியிருப்பதை போல் பேசிய பிரியங்கா, எந்த மாதிரயான பொண்ணு வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு வெளியே கூட்டிட்டு போனால் பார்ப்பவர்கள் எல்லாம் பொறாமை பட வேண்டும். அந்தளவுக்கு அழகனா கண்ணுக்கு லட்சமான பொண்ணு வேண்டும் என்று கூறினார்.

சண்டை போட வேண்டும்
மேலும் ஈவ்னிங் ஆனால் என்னுடன் சண்டை போட வேண்டும் என்றும் மனதில் உள்ள ஆசைகளையும் கொட்டினார். இதனைக் கேட்ட பிரியங்கா நீங்கள் விரும்பியது போல் அழகான கண்ணுக்கு லட்சனமான பொண்ணு கிடைப்பார் என்று கூறி மேட்ரிமோனி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் பிரியங்கா.


Click it and Unblock the Notifications











