Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா? ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்த சஞ்சீவ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்த நடிகர் சஞ்சீவ் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்ட் கன்டெஸ்ட்டன்ட்டாக நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுத்தார்.
கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்
நடிகர் விஜய்யின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் கறுப்பு நிற ஷெர்வானியில் கலக்கலாக என்ட்ரி கொடுத்தார்.
கட்டியணைத்து வரவேற்பு
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சஞ்சீவை கட்டியணைத்து வரவேற்றனர் ஹவுஸ்மேட்ஸ். இதனை தொடர்ந்து பேசிய சஞ்சீவ் இதுவரை முடிந்த சீசன்களை போலவே இந்த சீசனும் நன்றாக இருக்கிறது என்றார். எல்லோரும் நன்றாக விளையாடுவதாக கூறினார்.
பிக்பாஸ் பார்க்கிறார் விஜய்
அப்போது குறுக்கிட்ட சிபி, விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா என்று கேட்டார். அதற்கு பார்க்கிறார் என்பதை டயலாக்கே இல்லாமல் கூறினார் சஞ்சீவ். தொடர்ந்து டைனிங் ஏரியாவில் சக ஹவுஸ்மேட்டுகளுடன் அமர்ந்த சஞ்சீவ், ஒவ்வொருவர் குறித்தும் புட்டு புட்டுட வைத்தார். அதன்படி அக்ஷராவை பார்த்த சஞ்சீவ், அக்ஷரா ஆல் இஸ் வெல், யார்கூட பேசுறதுங்ற டவுட்டே வேண்டாம். எல்லாருடையும் பேசணும் என்று கூறினார்.
எரிமலையாகிவிட்டார்
அடுத்ததாக வருண் குறித்து கூறிய சஞ்சீவ், வந்த போது அமைதியாக இருந்தார். அதன்பிறகு எரிமலையாகி வெடிச்சுட்டார் என்று கூறினார். பின்னர் சிபி குறித்து பேசிய சஞ்சீவ் ரொம்ப அப்ஸர்வ் பண்றீங்க.. இதுவரைக்கும் போதும்.. இதுக்குமேலேயும் அப்ஸர்வ் பண்ண வேண்டாம். ஒரு வாரமாய் வேற மாதிரி ஆயிட்டிங்க என்று கூறினார்.
ஏதோ தந்திரம்
அடுத்து இமான் அண்ணாச்சி குறித்து பேசிய சஞ்சீவ் இந்த கேடர்ல இதுக்கு முன்னாடி வந்தவங்கள்லாம் 50 நாள் தாண்டல.. நீங்க ஏதோ ஸ்ட்ரேட்டர்ஜி வச்சு விளையாடுறீங்க என்று கூறினார். பின்னர் தாமரை குறித்து பேசிய சஞ்சீவ், ஸ்கூல்ல எக்ஸாம் நடக்கும்போது எல்லாரும் அமைதியா இருப்பாங்க, ஒரு பொண்ணு மட்டும் எதுவுமே படிக்கலன்னு சொல்லி ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கும். அதுபோல தாமரை தெரியல தெரியலன்னு சொல்லி ஸ்கோர் பண்ணிடுவாங்க என்றார்.
வைரக்கியமான மனிதர்
நிரூப் குறித்து பேசிய சஞ்சீவ் நான் வந்தது விளையாட தான், யாரை பத்தியும் எனக்கு கவலை இல்லை என்ற டோன்ட் கேர் ஆட்டியூட்டில் இருப்பவர் என்றார். அடுத்து அமீர் குறித்து பேசிய அவர், அமீர் நல்ல டான்ஸ் மாஸ்டர், கோரியோ கிராஃபர் என்றார். அபினய் குறித்து பேசிய சஞ்சீவ், இதில் நானும் ஏதாவது செய்ய வேண்டும் என இருக்கும வைரக்கியமான மனிதர் என்று கூறினார்.
சந்தோஷமா வச்சுக்க முடியாது
அடுத்து பாவனி குறித்து பேசிய சஞ்சீவ், வந்த நாள் முதலே பாவமாக இருக்கும் ஒரு கேரக்டர் இவர்தான் என்றார். அடுத்து ராஜு குறித்து பேசிய சஞ்சீவ் அவர் அழகான கேம்மை விளையாடுகிறார், இன்னும் சூடு பிடிக்கும் என்றும் சூசகமாக கூறினார். அடுத்து ஐக்கி குறித்து பேசிய சஞ்சீவ், நாம எப்போவுமே எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்க முடியாது என்று கூறினார்.
என்னை பார்க்குற மாதிரி
அபிஷேக் குறித்து பேசிய சஞ்சீவ், ஏற்கனவே இந்த வீட்டுல இருந்து போயிட்டு இப்போ வந்திருக்காரு, திறமை இருப்பதால்தான் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். பிரியங்கா குறித்து பேசிய சஞ்சீவ் என்னை பார்க்குற மாதிரியான கேரக்டர் பிரியங்கா என்றார். ரொம்ப சென்ஸிட்டிவ், ரொம்ப லவ், ரொம்ப கேரிங், சிரிப்பு சத்தம் கேட்க நீங்கள் தான் காரணம் என்றார்.