Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உதவி பண்ணது ஒரு குத்தம்மா.. என்ன கம்ப்ளைன்ட் பண்ணனுமோ பண்ணிக்கோ.. இசைவாணியால் கடுப்பான தாமரை!
சென்னை: நெருப்பு காயின் ஆளுமையை பயன்படுத்தி வரும் இசைவாணியால் அப்செட் ஆனார் தாமரை செல்வி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற பஞ்ச தந்திரம் டாஸ்க் நடைபெற்றது. இதில் காயின்களை கைப்பற்றி போட்டியாளர்களுக்கு தனி ஆற்றலையும் ஆளுமையையும் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இந்த வாரம் நெருப்பு காயின் ஆளுமை அந்த காயினை கைப்பற்றிய இசைவாணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறது.
அதிகார தோரணை
இசைவாணியே அனைத்து அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டால் பிறகு நான் எதற்கு கேப்டன் என மதுமிதா ஒரு பக்கம் புலம்பி வருகிறார். பிக்பாஸ் சொல்வதைதான் இசைவாணி செய்கிறார். ஆனால் இசைவாணி அனைத்து ஹவுஸ்மேட்டுகளிடம் அதிகாரத் தோரணையை காட்டி வருவதாக வருத்தப்படுகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.
எரிச்சலாகும் ஹவுஸ்மேட்ஸ்
குறிப்பாக அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் இடையே ஏற்கனவே நான் சிங்காக உள்ளது. இந்த நேரத்தில் என்னைக் கேட்டுதான் கிட்சனில் எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும், நான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என இசைவாணி பேசுவது ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
கேட்டுதான் சமைக்கவேண்டும்
இந்நிலையில் இன்றைய எபிசோடில் தாமரை செல்வி கிச்சனில் அந்த டீம்முக்கு உதவும் வகையில் செயல்பட்டுள்ளார். இதனை பார்த்த இசைவாணி, என்னை கேட்டுவிட்டுதான் இனிமேல் சமைக்க வேண்டும் என்று கூறினார்.
பிக்பாஸிடம் புகார்
இதனைக் கேட்ட தாமரை செல்வி, என்கிட்ட சொல்லாத நான் சமையல் டீம் இல்லை என்றார். அப்புறம் ஏன் அங்கு சென்று சமைத்தீர்கள் என்று கேட்டார் இசைவாணி. அவர்கள் உதவி கேட்டார்கள் செய்தேன் என்றார் தாமரை. என்னைக் கேட்காமல் எதுவும் செய்தால் நான் பிக்பாஸிடம் புகார் செய்வேன் என்றார் இசைவாணி.
மீண்டும் முட்டிக் கொண்டது
இதனால் கடுப்பான தாமரை செல்வி, போய் என்ன கம்ப்ளைன்ட் பண்ணனுமோ பண்ணிக்கோ.. நான் தண்டனையை அனுபவிச்சிக்கிறேன் என்று கத்தினார். தொடர்ந்து அண்ணாச்சியிடம் பேசிய இசைவாணி, சாப்பாடு, கஞ்சி எதுவும் வீணாகக்கூடாது. என்னைக்கேட்டு தான் சமைக்க வேண்டும் என்றார். இதனால் இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கும் முட்டிக் கொண்டது.