Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாமா கையால் ஆசை ஆசையாய் மல்லி பூ வைத்துக் கொண்ட தாமரை.. செம சென்டிமென்ட் போங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பஸ் வீட்டில் தற்போது ஃபிரிஸ், லூப், ரிலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின் போது பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது வாடிக்கை.
அவர் ரொம்பவும் பணிவாகதான் கூறினார்... அல்லு அர்ஜுனுக்கு பரிந்து பேசி ஊடகத்தை விளாசிய விஜே அஞ்சனா!
அந்த வகையில் இந்த சீசனிலும் அதே முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. நேற்றைய எபிசோடில் நிரூப்பின் காதலியான யாஷிகா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்.
முதல் புரமோவில் மகன்
அவரை தொடர்ந்து வருணின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆயினர். இதேபோல் பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் தாமரையின் மகன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது காட்டப்பட்டது.
வாரி அணைத்து முத்தம்
இதனை தொடர்ந்து தற்போது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் தாமரை செல்வியின் கணவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் அவர், ஆசை மனைவியை பார்த்ததும் வாரி அணைத்து முத்தம் கொடுக்கிறார்.
எப்படி மாமா விளையாடுறேன்?
பின்னர் ஹவுஸ்மேட்டுகளுடன் கை குலுக்கி பேசும் அவர் பின்னர் பெட்ரூம் ஏரியாவில் அமர்ந்து தாமரை செல்வி உட்பட அனைவரிடமும் பேசுகிறார். அப்போது உன் பொண்டாட்டி எப்படி மாமா விளையாடுகிறேன் என்று கேட்கிறார் தாமரை. அதற்கு தயவு செஞ்சு கோபப்படாதே என்று அவரது கணவர் அறிவுரை கூறுகிறார்.
எனக்கே ஒரு மாதிரிதான் இருக்கு
தொடர்ந்து பேசும் அவர் உள்ளே வரும் போது பயப்படாதே என்று சொல்லி அனுப்பினேன். ஆனால் உள்ளே வரும்போது எனக்கே ஒரு மாதிரியாகதான் இருந்தது. தொடர்ந்து தான் வாங்கி வந்த மல்லிப்பூவை ஆசையாக தாமரையின் தலையில் வைத்து விடுகிறார் அவரது கணவர்.
மாமாவை பார்த்த சந்தோஷத்தில் தாமரை
அதற்கு எங்கிட்டு வச்சாலும் சரிதான் மாமா... பூ வச்சு ரொம்ப நாள் ஆச்சு என்று கூறுகிறார் தாமரை. புரமோவின் படி தனது மகனையும் கணவரையும் பார்த்த சந்தோஷத்தில் செம ஹேப்பியாக உள்ளார் தாமரை. இதனை பார்த்த தாமரையின் ரசிகர்களும் ஹேப்பியாகியுள்ளனர்.