Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாமினேஷனில் இடம் பிடித்த 9 போட்டியாளர்கள்... அப்போ இந்த வாரம் வெளியேற போறது இவர்தானா?
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் நிகழ்ச்சி சற்று சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இன்னமும் சில போட்டியாளர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. விஜய் டிவியும் தங்களின் ஃபேவரைட்டுகளான 5 போட்டியாளர்களை மட்டுமே ஃபோகஸ் செய்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாகும் பிரபல நடிகை? தீயாய் பரவும் தகவல்!
கடந்த வாரம் முதல் நாமினேஷன்
இதனால் மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களா? என்ன செய்கிறார்கள் என்று பார்வையாளர்களுக்கு தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டின் கேப்டனான தாமரை செல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகியோரை தவிர மற்ற 15 போட்டியாளர்களுமே நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.
வெளியேறிய நாடியா சங்
இதில் முதல் எவிக்ஷனாக மலேசிய மாடலான நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியேறினார். இந்நிலையில் திங்கள் கிழமையான நேற்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.
லிஸ்ட்டில் 9 போட்டியாளர்கள்
அதன்படி அபிஷேக், அக்ஷரா, பாவனி ரெட்டி, தாமரை செல்வி, சின்னப்பொண்ணு, அபினய், பிரியங்கா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் ஆவர். கடந்த வாரமே சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ஆகியோர் இறுதி வரை சென்றனர். இந்நிலையில் இந்த வார நாமினேஷனிலும் இருவரும் இடம் பிடித்துள்ளனர்.
கேமரா மேன்களின் க்ரஷ்
அக்ஷரா ரெட்டி குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் விஜய் டிவி எடிட்டர்கள் மற்றும் கேமரா மேன்களின் க்ரஷாக உள்ளார். அவரும் மனதில் பட்டதை பட்டென தெளிவாக பேசி விடுகிறார். அதோடு அவருக்கு அபிஷேக்குடனும் பாவனியுடனும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிக கன்டென்ட் கிடைக்கும் என்பதால் அவரையும் நிகழ்ச்சிக் குழு வெளியேற்றாது.
விஜய் டிவி புராடெக்ட்
அடுத்து பிரியங்கா அவர் விஜய் டிவி புராடெக்ட் என்பதால் டைட்டில் இல்லாவிட்டாலும் நிகழ்ச்சியில் கடைசி வரை கொண்டு செல்லப்படுவார் என முன்பே கணிக்கப்பட்டது. அதோடு நிகழ்ச்சியில் முக்கால் வாசி பிரியங்கா மட்டுமே காட்டப்படுகிறார். ஆகையால் அவரும் வெளியேற வாய்ப்பில்லை.
கொலாப்ஸான காதல் ட்ராக்
அடுத்து பாவனி ரெட்டி, பாவனி ரெட்டியும் கன்டென்ட்டுகளை கொடுக்க முயற்சி செய்கிறார். சக போட்டியாளரான அபினய் தன்னிடம் பழகுவது காதல் போன்று இருப்பதாக அபிஷேக்கிடம் புலம்பிய பாவனி, பின்னர் அபினயிடமே கேட்டு தெளிவடைந்தார். அபினய் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூற காதல் ட்ராக் கொலாப்ஸாகி விட்டது.
கமலின் ரெஃபரன்ஸ்
இருப்பினும் அவ்வப்போது மற்றவர்களை வெறுப்பேற்றி தன்னால் முடிந்த அளவுக்கு இருப்பை பதிவு செய்ய முயற்சி செய்கிறார் பாவனி. இதனால் அவரும் இந்த வாரம் வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லை. அபினய் கமலின் ரெஃபரன்ஸால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவர் என்று கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்கள்
ஆகையால் அபினய்யும் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற வாய்ப்பில்லை என தெரிகிறது. இதேபோல் இசைவாணி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
டேஞ்சர் ஸோனில் இருவர்
அடுத்து அபிஷேக் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் அவர் கன்டென்ட் கொடுத்து வருகிறார். ஆகையால் எவ்வளவு குறைவாக வாக்குகள் பெற்றாலும் அவரை நிகழ்ச்சிக் குழு தற்போது வெளியேற்றாது என்றே கூறப்படுகிறது. இதனால் சின்னப்பொண்ணு மற்றும் தாமரை செல்வி ஆகியோர்தான் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ளதாக தெரிகிறது.