Just In
- 14 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் குவாரண்டைனில் இருந்து திடீரென வெளியேறிய வைல்டு கார்ட் ஆசிம்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக குவாரண்டைனில் இருந்த ஆஸிம் திடீரென வெளியேறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுச்சி ஆகிய 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா மற்றும் சுச்சி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர்.

ஹோட்டலில் குவாரண்டைன்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர் ஆசிம் பங்கேற்க உள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆசிம் கொரோனா சோதனை முடிந்து 15 நாட்கள் குவாரண்டைனில் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

பகல் நிலவு சீரியல்
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுச்சி வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆசிம், வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே ஆசிமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி நாராயணனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் இணைந்து நடித்தனர்.

ஒருதலையாக காதலித்த ஷிவானி
அந்த சீரியலின் போது ஷிவானிக்கும் ஆசிமுக்கும் காதல் என தகவல் பரவியது. ஆனால் ஷிவானிதான் ஆசிமை ஒன் சைடாக காதலித்தார் என்றும் ஆசிம் அவரது காதலை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆசிம் தனது காதலை ஏற்காததால் ஷிவானி அந்த சீரியலில் இருந்து திடீரென பாதியிலேயே விலகினார்.

ஷிவானியின் உண்மை முகம்
பிக்பாஸ் வீட்டில் தற்போது பாலாஜியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் ஷிவானி. தங்களுக்குள் இருப்பது நட்புதான் என்று ஷிவானி சொன்னாலும் பாலாஜியுடனான அவரது நடவடிக்கை நட்பையும் தாண்டியதாகவே தெரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஷிவானியின் உண்மை முகத்தை கொண்டு வரவே பிக்பாஸ் ஆசிமை களமிறக்குவதாக கூறப்பட்டது.

ரசிகர்கள் ஆர்வம்
இதனால் ஆசிம் பங்கேற்கும் எபிசோடையும் ஆசிம் என்ட்ரியை பார்த்து ஷிவானி எப்படி ரியாக்ட் செய்வார் என்பதையும் காண பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில்தான் குவாரண்டைனில் இருந்து ஆசிம் திடீரென வெளியேறிய தகவல் வெளியாகியுள்ளது.

வெளியேறிய ஆசிம்
அதாவது சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆசிமை பார்த்ததாக தகவல் வெளியானது. இதனால் அவர் குவாரண்டைனில் இருந்து வெளியேறிவிட்டாரா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.

அம்மாவுக்கு உடல்நலக்குறைவு
இந்நிலையில் அவர் எதற்காக மருத்துவமனைக்கு சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆசிமின் அம்மா ஜனத்துக்கு திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக அவரை பார்க்க ஆசிம் மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

நாளை என்ட்ரியாகலாம்
இரண்டு நாட்கள் தனது அம்மாவுடன் இருந்த ஆசிம் மீண்டும் குவாரண்டைனுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது வரும் நாட்களில் ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் நிச்சயம் என்ட்ரி கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.