Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிக்பாஸ் குவாரண்டைனில் இருந்து திடீரென வெளியேறிய வைல்டு கார்ட் ஆசிம்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக குவாரண்டைனில் இருந்த ஆஸிம் திடீரென வெளியேறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுச்சி ஆகிய 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா மற்றும் சுச்சி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர்.
ஹோட்டலில் குவாரண்டைன்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர் ஆசிம் பங்கேற்க உள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆசிம் கொரோனா சோதனை முடிந்து 15 நாட்கள் குவாரண்டைனில் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
பகல் நிலவு சீரியல்
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுச்சி வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆசிம், வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே ஆசிமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி நாராயணனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் இணைந்து நடித்தனர்.
ஒருதலையாக காதலித்த ஷிவானி
அந்த சீரியலின் போது ஷிவானிக்கும் ஆசிமுக்கும் காதல் என தகவல் பரவியது. ஆனால் ஷிவானிதான் ஆசிமை ஒன் சைடாக காதலித்தார் என்றும் ஆசிம் அவரது காதலை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆசிம் தனது காதலை ஏற்காததால் ஷிவானி அந்த சீரியலில் இருந்து திடீரென பாதியிலேயே விலகினார்.
ஷிவானியின் உண்மை முகம்
பிக்பாஸ் வீட்டில் தற்போது பாலாஜியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் ஷிவானி. தங்களுக்குள் இருப்பது நட்புதான் என்று ஷிவானி சொன்னாலும் பாலாஜியுடனான அவரது நடவடிக்கை நட்பையும் தாண்டியதாகவே தெரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஷிவானியின் உண்மை முகத்தை கொண்டு வரவே பிக்பாஸ் ஆசிமை களமிறக்குவதாக கூறப்பட்டது.
ரசிகர்கள் ஆர்வம்
இதனால் ஆசிம் பங்கேற்கும் எபிசோடையும் ஆசிம் என்ட்ரியை பார்த்து ஷிவானி எப்படி ரியாக்ட் செய்வார் என்பதையும் காண பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில்தான் குவாரண்டைனில் இருந்து ஆசிம் திடீரென வெளியேறிய தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேறிய ஆசிம்
அதாவது சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆசிமை பார்த்ததாக தகவல் வெளியானது. இதனால் அவர் குவாரண்டைனில் இருந்து வெளியேறிவிட்டாரா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.
அம்மாவுக்கு உடல்நலக்குறைவு
இந்நிலையில் அவர் எதற்காக மருத்துவமனைக்கு சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆசிமின் அம்மா ஜனத்துக்கு திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக அவரை பார்க்க ஆசிம் மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.
நாளை என்ட்ரியாகலாம்
இரண்டு நாட்கள் தனது அம்மாவுடன் இருந்த ஆசிம் மீண்டும் குவாரண்டைனுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது வரும் நாட்களில் ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் நிச்சயம் என்ட்ரி கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?