Don't Miss!
- News தமிழக லோக்சபா தேர்தல் 2024: 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் லிஸ்ட்!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தொப்புள் கொடியை போலவே வலிமையானது தேசிய கொடி.. புலிப்பெண்ணாக மாறிய ’பிகில்’ பாண்டியம்மா!
சென்னை: பிகில் திரைப்படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு புலிப் பெண்ணாக மாறி பதிவிட்டு இருக்கும் உணர்வுப் பூர்வமான போஸ்ட் வைரலாகி வருகிறது.
Recommended Video
மாஷ் அப், டிக் டாக் வீடியோக்கள் போட்டு கலக்கி வந்த இந்திரஜா சங்கருக்கு, தளபதி விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்!
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போஸ்ட்களை போட்டு வரும் இந்திரஜா சங்கர், குடியரசு தினத்தை முன்னிட்டு போட்டோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார்.
72வது குடியரசு தின விழா
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், மக்களுக்கான அரசையும் மக்கள் சாசனத்தையும் உருவாக்கி குடியரசு தினத்தை 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி 40 கோடி இந்தியர்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய நாள் இன்று. 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பதிவிட்டுள்ள நாட்டுப் பற்று பதிவுகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.
பாயும் புலிகளும் நாங்களே
முகத்தில் புலி வேஷம் போட்டு உடம்பில் தேசியக் கொடி ஆடை, தலையில் தேசியக் கொடி டர்பன் மற்றும் பேக்ரவுண்டில் மயில் இறகு என குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறார் நடிகை இந்திரஜா சங்கர். "மழை அறிந்து ஆடும் அழகு மயிலும் நாங்களே.. பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே.. அழகு மயிலாக வாழவும், பாயும் புலியாக மாறவும் தயாராவோம்... வாழ்க வையகம்!" என உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளை போட்டு இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்திரஜா.
வறுமையை துரத்தி
வறுமையை துரத்தி வளமையைகாண்போம்.. வேற்றுமையில்லா ஒற்றுமையை காண்போம்.. பசியில்லா வயிறைக் காண்போம் தீபகற்பமாம் இந்தியா மாற சீறும் சிறுத்தையென மாறுவோம் நாம்.. .வந்தேமாதரம்!" என கர்ஜிக்கும் தோற்றத்துடன் இன்னொரு போட்டோஷூட் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.
மூவர்ணக் கொடி மகிமை
மூவர்ணக் கொடியில் காவி காட்டுவது - தியாகத்தை, வெண்மை வெளிக்கொணர்வது - தூய்மையை, பச்சை விவரிப்பது - விவசாய பசுமையை... நிறங்களில் வேற்றுமையிருந்தாலும் மனங்களில் ஒற்றுமையுடன் வாழ்வோம் நாம்.. ஜெய்ஹிந்த்!" என இன்னொரு போஸ்ட்டையும் அருமையான கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.
தொப்புள்கொடி போல
தாயின் தொப்புள்க்கொடி எவ்வளவு வலிமையானதோ அவ்வளவு வலிமை மிக்கது நம் தேசியக்கொடியும். அவ்வலிமையை மேம்படுத்த ஒன்றுபடுவோம்.அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்! என அசோக சின்னத்தில் இருக்கும் மூன்று தலை கொண்ட புலியாக காட்சி தந்து நாட்டுப் பற்றை பறைசாட்டியுள்ள பிகில் பாண்டியம்மா நடிகை இந்திரஜா சங்கரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!