Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
Bigil: "லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டு தானே".. ஏ.ஆர்.ரஹ்மானை ஊமைக்குத்து குத்திய கஸ்தூரி!
பிகில் பட பாடல் லீக்கான விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் கசிந்தது பற்றி நடிகை கஸ்தூரி கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் நேற்று இணையத்தில் கசிந்தது.
விஜய் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தாலும், படக்குழு அதிர்ச்சியில் தான் உள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாடல் எப்படி கசிந்தது என்பது குறித்து படக்குழு விசாரித்து வருகிறது.
Bigil அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிங்க அட்லி: விஜய் ரசிகர்கள் கோரிக்கை
சிங்க பெண்ணே தான் ஹாட் டாபிக்
இது ஒருபுறம் இருக்க 'சிங்கப் பெண்ணே' பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களின் பேச்சு பொருளாக உள்ளது. எல்லா விஷயங்களுக்கும் கமெண்ட் போடும் நடிகை கஸ்தூரி, பிகில் பாடல் குறித்து தனது பாணியில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
|
ஏற்கனவே கேட்டது தானே...
அதில் அவர், " லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே . புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
ஊமைக்குத்து
கஸ்தூரியின் இந்த கமெண்டை 'இது தான் ஊமைக்குத்து' என நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். தமிழ்நாட்டை ஆளப்போவது கஸ்தூரி தான் என ஒரு சிலர் கமெண்ட் பாஸ் செய்கின்றனர்.
ரணகளத்திலும் ஒரு குதூகலம்
ரணகளத்திலும் ஒரு குதூகலம் என்பது போல, பாட்டு எப்படி கசிந்தது என பிகில் அட்லியும், ரஹ்மானும் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்க, அசால்டாக ஒரு கமெண்ட் போட்டு ஊமை குத்து குத்திவிட்டார் கஸ்தூரி. சிங்கப் பெண்ணே பாடல் கசிந்ததா? அல்லது கசியவிடப்பட்டதா? என்பது வேறு கதை மக்களே.