Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வர்ஷா வாக்கு கொடுத்தால் கண்டிப்பாக பலிக்கும் என்று பிகில் ரசிகர்கள் நம்பிக்கை
பிகில் 300கோடி வசூல் செய்தது என்று ட்விட்டரில் கூறியுள்ள வர்ஷாபோலம்மா.
Recommended Video
சென்னை : பிகில் படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அதில் ராயப்பன் கதாபாத்திரம் விஜய் ரசிகர்களை கவர்ந்ததாகவும் மைக்கேல் கதாபத்திரம் எல்லாரையும் பல நேரத்தில் புல்லரிக்க வைத்தது என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.பிகில் படத்தில் விஜயுடன் நயன்தாரா ,யோகிபாபு,ஜாக்கி ஜெராப் ,கதிர்,இந்துஜா,அம்ரூதா,வர்ஷா,சாய்தீனா,ஆனந்த்ராஜ் போன்ற பலரும் படத்தில் நடித்திருந்தனர் . படத்தின் சிங்கபெண்ணே பாடலின் போது இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அட்லியும் திரையில் வந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர்.
தீபாவளி அன்று வெளியான பிகில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது .படம் ரிலீஸாகி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வசூல் சாதனைகளை செய்து வருவதாக சமூக வலை தளங்களில் பேசபட்டு வருகிறது.
படம் அனைத்து மக்களுக்கும் பிடித்தது போல் உள்ளது மேலும் பெண்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்ததாக பெண்கள் கூறினார்கள்.
தற்போது இந்த படத்தில் நடித்த வர்ஷாபோலம்மா ட்விட்டரில் பிகில் படம் 300கோடி வசூல் செய்துவிட்டது என்று பிகில் படத்தில் ராயப்பனின் புகைப்படம் ஒன்றை போட்டு இதனை கூறியுள்ளார் .தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வருவதற்கு முன் வர்ஷா இப்படி பதிவேற்றிருப்பது ,பலரிடத்தில் கேள்விகளை உண்டாக்கி உள்ளது . ஏனெனில் ரசிகர்கள் சிலர் பொய் தகவல்களையும் சில நேரங்களில் பரப்புவார்கள் அது தெரியாமல் வர்ஷா பதிவேற்றுவிட்டாரா அல்லது படம் உண்மையிலே படம் 300கோடி வசூல் செய்து விட்டதா என்று கேள்விகள் எழும்பியுள்ளன .
தற்போது வர்ஷா போலம்மா தெழுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.'சூசி சூதாங்கானே ' என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார் வர்ஷா ,இந்த படத்தில் கதநாயகனாக அறிமுகம் ஆகிறார் சிவா கன்டுகுரி .இவர் பிரபல தயாரிப்பாளரான ராஜ் கன்டுகுரியின் மகன் . இந்த படம் ஒரு ரொமென்டிக் காதல் படமாக தயாரிக்க பட்டு வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வர்ஷா வாக்கு பலிக்குமா , வருஷாவருஷம் வர்ஷாவுக்கு பல வெற்றிப்படங்கள் அமையுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்