நள்ளிரவில் ரஹ்மான் வீட்டுக்குள் புகுந்த பீஹார் இளைஞர் கைது!

ஏ.ஆர்.ரஹ்மான் வீடு சென்னை அசோக் நகரில் உள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இவரது வீட்டுக்குள் மர்ம இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். இதனால் வீட் டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அசோக் நகர் போலீசார் விரைந்து சென்று அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவரது பெயர் ரஜுத் கான்.
பீகாரை சேர்ந்தவர். போலீஸ் விசாரணையில் ரஜுத்கான், 'நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர். அவரிடம் இசையை கற்றுக்கொள்ள விரும்பினேன். இதனால் அவரது வீட்டுக்கு வாய்ப்பு கேட்பதற்காக சென்றேன்,' என்று கூறியுள்ளார். இந்த இளைஞர் மும்பையில் ஒரு நிறுவனத்தில் சமையல் கலைஞராக உள்ளாராம்.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











