Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருச்சிக்கு வரும் "பின்லேடன்"... என்னென்ன பாடுபடப் போறாரோ..!
சென்னை: பின்லேடன் என்ற பெயரில் புதிய தமிழ்ப்படம் ஒன்று தயாராகிறது. அரவிந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சிவா நாயகனாக நடிக்கிறார்.
விதவிதமாக யாரும் எதிர்பார்க்காதபடி தலைப்பு வைப்பது தான் தற்போதைய தமிழ் சினிமாவின் டிரண்ட். அந்தவகையில், புதிய தமிழ்ப்படம் ஒன்றிற்கு பின்லேடன் எனப் பேர் வைத்து மிரட்டியிருக்கிறார்கள்.
ஆக்ஷன் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகிறதாம்.
திருச்சியில் பின்லேடன்...
தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இருக்காது என நினைக்கவேண்டாம் என்கிறார் இயக்குநர். அதாவது பின்லேடன் திருச்சிக்கு வந்து என்னென்ன அவதியெல்லாம் படுகிறார் என்பது தான் கதைக்களமாம்.
2 கதைகள்...
அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் இரண்டு கதைகள் இருக்கிறதாம். அதில் ஒன்று பின்லேடனின் திருச்சி வருகை. மற்றொன்று சிவாவைப் பற்றியது. ஆனால், இரண்டு கதைக்கும் சம்மந்தம் இல்லாமல் படம் இருக்குமாம்.
வித்தியாசமான கெட்டப்...
இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான கெட்டப்பில் வந்து சிவா அசத்த இருக்கிறாராம். பின்லேடன் வேடத்தில் நடிக்கப் போகும், நடிகரை இன்னும் தேர்வு செய்யவில்லை என இயக்குநர் அரவிந்த் கூறியுள்ளார்.
டார்க் காமெடி...
டார்க் காமெடி எனப்படும் கொஞ்சம் வன்முறையும் , அரசியலும் கலந்த காமெடிப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாயா நாயகியாக நடிக்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.