Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தவறாக நடக்க முயன்றதால் படத்தில் இருந்து விலகினேன்.. முன்னணி தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்!
மும்பை: முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் அவர் படத்தில் இருந்து விலகினேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழிலும் நடித்துள்ளார்.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடித்த சச்சின் படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா லாக்டவுன் திருமணம்.. நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் இயக்குனரை மணந்த பிரபல நடிகை!
கரண் சிங் குரோவர்
இவர் 1996 ஆம் ஆண்டு நடிகர் டினோ மோரியாவை காதலித்து வந்தார். சில வருடங்கள் தொடர்ந்த இவர்கள் காதல் பிறகு முறிந்தது. அடுத்து ஜான் ஆபிரஹாமை காதலித்து வந்த பிபாஷா அவரிடம் இருந்தும் விலகினார். பிறகு அலோன் என்ற படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவர் மீது காதல் வயப்பட்டார். இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
தவறாக நடக்க முயன்றார்
இருவரும் இணைந்து டேஞ்சரஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளனர். விக்ரம் பட் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், 7 பாகங்களைக் கொண்டது. கடந்த 14 ஆம் தேதி இதன் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. இதில், சோனாலி ராவத், நடஷா சுரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியுள்ளார்.
கண்டு பயந்தார்கள்
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அப்போது நான் சினிமாவுக்கு புதிதாக வந்திருந்தேன். மும்பையில் தனியாக இருந்தேன். அதனால் எப்போதும் என்னைக் கடுமையாகக் காட்டிக்கொள்வேன். அதனால் என்னைக் கண்டு பயந்தார்கள். ஆனால், அப்படியும் எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. ஒரு முன்னணி தயாரிப்பாளரின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.
புன்னகை காணவில்லை
அந்த தயாரிப்பாளர்தான் அனுப்பி இருந்தார். அதில், உங்கள் புன்னகையை காண முடியவில்லை என்றும் இளமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறீர்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது. நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அதே குறுஞ்செய்தியை மீண்டும் அனுப்பினார். பிறகு நண்பருக்கு அனுப்பப்பட வேண்டிய, ஓர் ஆச்சரிய அனுபவத்தை பற்றிய விரிவான குறுஞ்செய்தியை அவருக்கு தவறாக அனுப்பிவிட்டேன்.
நடிக்க மாட்டேன்
அது வேலை செய்தது. அதை படித்தபிறகு அவரிடம் இருந்த எந்த செய்தியும் எனக்கு வரவில்லை. பிறகு என் செகரட்டரியை அழைத்து அவரிடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடுமாறும் இனி அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் சொன்னேன். பின்னர் அந்த தயாரிப்பாளரை ஒரு விழாவில் கண்டேன். என்னைப் பார்த்ததுமே அமைதியாக நடந்து சென்றார். அப்போது அவரைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இவ்வாறு பிபாஷா கூறியுள்ளார்.