Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரச்சினையில் 'பிரியாணி'?
ஸ்டுடியோ க்ரீன் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம், முன்னணி ஹீரோ கார்த்தி, நம்பர் ஒன் ஹீரோயின் ஹன்சிகா, மங்காத்தா தந்த இயக்குநர் என எல்லாம் இருந்தும்.... ஏன் ஏன்? என்று கோடம்பாக்கமே கேட்கும் அளவுக்கு இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
காரணம்... இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் படத்தின் ஹீரோ கார்த்திக்கும் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு என்கிறார்கள்.
வெங்கட் பிரபு அன்ட் கோ, தங்களுக்கே உரிய விளையாட்டுத்தனத்துடன் படத்தை இழு இழு என இழுத்துக் கொண்டிருப்பது தயாரிப்புத் தரப்பையும், முக்கியமாக பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோவையும் கோபப்படுத்திவிட்டதாம். கார்த்தியின் கால்ஷீட்டை ஏகத்துக்கும் வீணடித்துவிட்டாராம் வெங்கட்பிரபு.
எடுத்த வரைக்கும் போதும்... நிறுத்துங்க என்று தயாரிப்புத் தரப்பு ஒரு பக்கம் சொல்ல, மறுபக்கம் ராஜேஷ் இயக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்குப் போய்விட்டாராம் கார்த்தி.
பிரச்சினை முடிந்து பிரியாண கமகமக்கத் தொடங்கியது என்ற நல்ல சேதி வரட்டும் விரைவில்!