'இந்த மாதிரி படத்தில் நடிக்க மாட்டேன்'...பிடிவாதம் பிடிக்கும் பிரியாணி
சென்னை: கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று பிரியாணி நடிகர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.
ஜீவனான நடிகரை வைத்து திருட்டு சம்பந்தமான படத்தை எடுத்த நடிகர் தற்போது அப்படத்தின் 2 வது பாகத்திற்கு நடிகர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

இப்படத்தைத் தயாரிக்க ஒரு பெரிய நிறுவனம் முன்வந்திருக்கிறது. ஆனால் படத்தின் கதை ரொம்பவே ஏடாகூடமாக இருக்கிறதாம்.
இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கத் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து தடுமாறி வரும் பிரியாணி நடிகரைச் சந்தித்து இப்படத்தின் கதையைக் கூறியிருக்கிறார்.
படத்தின் கதையைக் கேட்ட நடிகர் இப்படி ஒரு படத்தில் நடித்து உள்ள மதிப்பையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்.
இதனால் சம்பளமாக எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
தர்போது வேறு யாராவது சிக்குவார்களா? என இயக்குநர் தீயாய் தேடி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











