ரோகிணி தியேட்டரில் ரசிகர்கள் அட்டூழியம்..விஜய்க்கு ஜம்முனு இருக்கும்போல்..ப்ளூ சட்டை மாறன் அதிரடி

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) லியோ ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ரோகிணி தியேட்டரை சேதப்படுத்தியது தொடர்பாக விஜய் இன்னமும் அமைதியாக இருக்கிறாரே என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. இதன் ட்ரெய்லரானது நேற்று வெளியானது. இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்து ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் படைத்த சாதனையை அசால்ட்டாக காலி செய்திருக்கிறது. லியோ ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் மெகா ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Blue Sattai Maran Criticized Vijay For Rohini Theatre Issue

விமர்சனம்: லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் அதற்கான விமர்சனங்கள் கடுமையாக எழுந்திருக்கின்றன. விஜய் பேசிய கெட்ட வார்த்தை, ட்ரெய்லரில் இருக்கும் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்திருக்கின்றன. முக்கியமாக விஜய்யின் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

என்ன நடந்தது: அதாவது லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியால் திரையரங்கின் சீட்டுக்களை கண்டபடி சேதப்படுத்தினர். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து விஜய் அவரது ரசிகர்களின் சார்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லை ரசிகர்களை கண்டித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என கூறினர்.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "ரோகிணி தியேட்டரில் பல இருக்கைகள் சேதம். திருப்பூர் தியேட்டரில் ட்ரைலர் பார்க்க கேட்டை தள்ளி.. வெறித்தனமாக ஓட்டம். பல செய்தி சேனல்களில் இவை வெளியாகி, விவாதப்பொருள் ஆகியும் தனது ரசிகர்களை கண்டிக்காமல் விஜய் மௌனம் காக்கிறார்.

தமிழ்நாட்டை இவரா காப்பாற்றுவார்?: இவர்தான் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறாரா? ஒருவேளை தேர்தலில் வென்றால்.. இந்த விசிலடிச்சான் குஞ்சுகளிடம் மக்கள் என்ன பாடு படுவார்கள்? சமீபத்தில் காந்தி ஜெயந்தியன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை போட்டனர். அகிம்சை வழியில் வாழ்ந்த காந்தி இப்படித்தான் தே**யா பையன் என்று பேச சொன்னாரா? தியேட்டரில் களேபரம் செய்ய சொன்னாரா?

ஜம்முனு இருக்கு: தயவு செய்து இனி தேசத்தலைவர்களுக்கு மரியாதை செய்தால்.. அவர்கள் சொன்னதை விஜய்யும், ரசிக சிகாமணிகளும் வாழ்வில் பின்பற்றட்டும். இல்லாவிட்டால் அவர்களை மதிக்கும் போலி நாடகத்தை நிறுத்துங்கள். இதை பற்றி விஜய் பேசப்போவதில்லை. இப்படி கம்முனு இருந்தா அவரோட வாழ்க்கை ஜம்முனு இருக்கும் போல" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X