Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரஜினி படத் தலைப்பு.. கோதாவில் குதித்து 'வீரா'வைப் பிடித்த பாபி சிம்ஹா!
ரஜினி படங்களின் தலைப்புகளை முன்பு அவரது மருமகன் தனுஷ்தான் அடிக்கடி பயன்படுத்தி வந்தார். இப்போது அத்தனை நடிகர்களுமே கோதாவில் குதித்துவிட்டனர்.
சமீபத்தில் விஷால் பாயும் புலியை அனுமதி பெற்று பயன்படுத்தினார். அடுத்து அஜீத்தும் விஜய்யும் மூன்று முகம் தலைப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சைலன்டாக வீரா தலைப்பை கொத்திக் கொண்டுள்ளார் பாபி சிம்ஹா.
இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடைன்மென்ட்.
"திட்டமிட்டு நாங்கள் ரஜினி சாரின் இந்தத் தலைப்பை எடுக்கவில்லை. அது தானாக அமைந்தது. பாபி சிம்ஹாவின் தொழில் நேர்மைக்கு நாங்கள் தரும் பரிசு இந்த வீரா தலைப்பு. ரஜினி சார் படத் தலைப்பைவிட வேறு என்ன பெருமையை பாபி சிம்ஹாவுக்கு நாங்கள் தரமுடியும்," என்கிறார் எல்ரெட் குமார்.
நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த இந்தப் படத்துக்கு எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். வீரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கே ராஜாராமன்.
'ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தது வரும் கதா நாயகன் பாபி சிம்மாவுக்கு 'வீரா' மேலும் ஒரு மணி மகுடம் ஆக அமையும்,' என்கிறார் ராஜாராமன்.
"எனது நிறுவனம் சார்பாக பல் வேறு திறமையான புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் ராஜாராம் எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. புதிய நாயகி ஐஸ்வர்யா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன் இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்துக்கு மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது," என்றார் எல்ரெட் குமார்.