Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரவுடியைத் தொடர்ந்து போலீசாக மாறும் பாபி சிம்ஹா?
சென்னை: சரத் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா போலீஸ் வேடத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா 'நேரம்', 'ஜிகர்தண்டா' படங்களில் வில்லனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார். குறிப்பாக 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார்.
எனினும் 'ஜிகர்தண்டா'வுக்குப் பின் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமுடன் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டுள்ளது.
பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கோ 2' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் மீண்டும் சரத்-பாபி சிம்ஹா கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.இப்படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் வேடத்தில் நடிக்கப் போவதாகவும், இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் என்றும் கூறுகின்றனர்.
இப்படத்தின் நடிக, நடிகையர் தேர்வு செய்யப்பட்ட பின், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.