Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ' ரீமேக்கை பெரும்தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்!
சென்னை: மெட்ரோ படம் வெளியாகும் முன்பே அதன் கன்னட உரிமை பெரும்தொகைக்கு விலை போயிருக்கிறது.
சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மெட்ரோ. சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் நாளுக்குநாள் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இதனை மையமாக வைத்து ‘மெட்ரோ' படத்தை 'ஆள்' புகழ் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க முடியாது என்று அடம்பிடிக்க, பதிலுக்கு படக்குழுவும் அடம்பிடித்து தணிக்கைச் சான்றிதழைக் கைப்பற்றியது.
வன்முறைக் காட்சிகள் அதிகமிருப்பதால் மறு தணிக்கையில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தனர். வருகின்ற 24 ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் மெட்ரோ படத்தின் கன்னட உரிமையை முரளி குறிப்பா என்ற நிறுவனம் பெரும் தொகை கொடுத்துக் கைப்பற்றியுள்ளது.
மீரா ஜாக்கிரதை படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.