திரைத் துளி
கவர்ச்சி நடிகை பாபிலோனாவுக்கும், அர்ஜூன் தாஸுக்கும் இடையே நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று சென்னை குடும்பநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குலுக்கல் நடிகை பாபிலோனாவுக்கும், அவர் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்பட்ட அர்ஜூன் தாஸ் என்பவருக்கும் சிலமாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. பாபிலோனாவின் சகோதரர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக அர்ஜூன் தாஸ் போலீஸில்புகார் கொடுத்தார்.
தனது முதல் கல்யாணத்தை மறைத்துவிட்டு, தன்னை தாஸ் ஏமாற்றி, 2வது திருமணம் செய்து கொண்டதாக பாபிலோனா புகார் கொடுத்தார்.
மேலும் தனது நகை, பணத்தை தாஸ் மோசடி செய்துவிட்டதாகவும் பாபிலோனா குற்றம் சாட்டினார்.
அர்ஜூன் தாஸ் தன்னை திருமணம் செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்பாபிலோனா.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா துரைசுவாமி, பாபிலோனா-அர்ஜூன் தாஸ் திருமணம்
கட்டாயத் திருமணமாகும். இது சட்டப்படி செல்லாது என்று அறிவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பாபிலோனாவுக்கு அந்தத் திருமணத்தில் இருந்து விவாகரத்து கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











