Don't Miss!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்களா? சல்மான் கான் மீது பக்கத்து வீட்டுக்காரர் பகீர் குற்றச்சாட்டு
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு வருவதாக பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுக்களை அந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நபர்கள் சுமத்தி இருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீடு அவரது சகோதரி அர்பிதாவின் பெயரில் உள்ளது.
ஹாட் ஸ்டாரில் வந்தாச்சு குக் வித் கோமாளி 3...இன்னிக்கு என்ன நடக்க போகுது தெரியுமா?
சமீபத்தில் அந்த தோட்டத்தில் தான் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் பார்ட்டி அங்கேதான்
பாலிவுட்டின் வசூல் மன்னன் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை அந்த பண்ணை வீட்டில் தான் பார்ட்டி நடத்தி கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற தனது 56வது பிறந்தநாளையும் நடிகர் சல்மான் கான் அங்கே தான் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பண்ணை வேலைகளை செய்வதிலும் சல்மான் கான் மிகவும் விருப்பம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாம்பு கடித்தது
டிசம்பர் 27ம் தேதி தனது 56வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தனது பண்ணை வீட்டுக்கு சென்ற நடிகர் சல்மான் கான் அதற்கு முன் தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த நிலையில் அவரை ஒரு பாம்பு தீண்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில், விஷம் குறைவான பாம்பு என்றும் சல்மான் கானுக்கு ஒன்றும் நேரவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.

பண்ணை வீட்டில் பிணங்கள்
இந்நிலையில், தற்போது நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் ஏகப்பட்ட நடிகர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக அவரது பண்ணை வீட்டுக்கு அருகே இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் கேத்தான் கக்கட் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்கனவே கருத்து மோதல் காரணமாக அவதூறு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படியொரு குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

பெயரை கெடுக்க
நடிகரின் பெயரையும் அவரது பணியையும் கெடுக்கும் விதமாக இதுபோன்ற உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை அவர் பரப்பி வருகிறார் என சல்மான் கானின் வழக்கறிஞர் பிரதீப் காந்தி கூறியுள்ளார். பண்ணை வீட்டுக்கு அருகே செல்லும் சாலையின் வழியை சல்மான் கான் அடைத்ததில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர். ஆனால், சல்மான் கானின் பண்ணை வீட்டை சோதனை போட வேண்டும் என அவரது பக்கத்து வீட்டுக்காரர் சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகிறார்.

சிகப்பு ரோஜாக்கள்
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் 1978ம் ஆண்டு வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை சல்மான் கானின் பக்கத்து வீட்டுக்காரர் ஓட்டுகிறார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த படத்தில் இளம் பெண்களை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்து அதற்கு மேல் ஒரு ரோஜா செடியை திலீப் கதாபாத்திரத்தில் நடித்த கமல் நட்டுவிடுவார்.