Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லேசான அறிகுறிகள்தான்.. அமிதாப் நலமாக இருக்கிறார்.. மருத்துவமனை சொன்ன நல்ல சேதி!
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் ஹோம் குவாரண்டைனில் உள்ளனர்.
அமிதாப் பச்சன் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமிதாப் பச்சனின் உடல்நிலை குறித்து நானவதி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. விரைவில் குணமடைய இந்திய திரையுலகமே பிரார்த்தனை!
அதில் அமிதாப் பச்சனுக்கு லேசான அறிகுறிகள்தான் இருப்பதாகவும் அவர் ஸ்டேபிளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரபலங்கள் பலரும் அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து நலம் பெற வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.