Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
சென்னை: ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என ரஜினியும் அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
நெல்சனும் அவர்களது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என இரவு, பகல் பாராமல் கடுமையாக வேலை பார்த்து வருகிறாராம்.
ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபலம் பாலிவுட்டில் இருந்து இணைய உள்ளாராம்.
ஏப்ரலில் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்... பின்வாங்கும் ரஜினியின் ஜெயிலர்... ரசிகர்கள் அப்செட்
வேகமெடுக்கும் ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது. சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்தளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து டாக்டர் படம் முலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சனுடன் இணைந்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருவதை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
நட்சத்திரக் கூட்டணி
ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயக், யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, புஷ்பா பட வில்லன் சுனில் ஆகியோரும் நடிப்பதாக ஜெயிலர் படக்குழு அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறது. மலையாளம், கன்னடம், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இணைந்துவிட்ட நிலையில், பாலிவுட் மட்டும் விதிவிலக்காக இருந்தது. ஆனால் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவரும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமிதாப்பச்சனுக்கு பதிலாக வில்லன் நடிகர்
மோகன்லால், சிவராஜ்குமார் இருவருமே ரஜினியின் நண்பர்களாக நடிப்பதாகவே சொல்ல்லப்படுகிறது. அதேபோல் அவர்கள் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்பச்சனும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்காக சில காட்சிகளில் நடிக்கலாம் என்ற செய்திகள் தீயாக பரவின. ஆனால் தற்போது அவரால் நடிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இன்னொரு பிரபலத்தை தட்டித் தூக்கியுள்ளது ஜெயிலர் டீம். அதன்படி ஜாக்கி ஷெராஃப் ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிகில் வில்லன் ஜாக்கி
விஜய்யின் பிகில் படத்தில் ஜேகே ஷர்மா என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் ஜாக்கி ஷெராஃப். ஆரண்யா காண்டம், கோச்சடையான், பிகில் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராப், தற்போது ஜெயிலர் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இதுகுறித்து இன்னும் படக்குழு அறிவிப்பு வெளியிடாத நிலையில், விரைவில் அபிஸியல் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்பட்ட ஜெயிலர் படம், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.