Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அண்ணாத்த படத்தில் ரஜினியை மிரட்ட போகும் வில்லன் இவர்தானாமே.. கேட்கும் போதே பயந்து வருது!
சென்னை: அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் வில்லன்களாக பிரகாஷ் ராஜ் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
வாவ்.. பிக்பாஸ் 4ல் பங்கேற்கிறார் அந்த நடிகரின் முன்னாள் காதலியான இளம் நடிகை? தீயாய் பரவும் தகவல்!
ஜாக்கி ஷெராஃப்
இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடைசியாக விஜயின் பிகில் படத்தில் நடித்தார்.
முக்கிய வில்லன்
தற்போது அண்ணாத்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையாக உருவாகும் அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
விரைவில் படப்பிடிப்பு
இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். ஈ.சி.ஆரில் விறுவிறுப்பான வேகத்தில் செட் பணிகள் நடைபெறுவதால் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ரஜினியுடன் ஜனவரியில்
மேலும் ஜாக்கி ஷெராஃப் விரைவில் ஷுட்டிங்கில் இணைந்து ரஜினிக்காந்த் இல்லாத தனது காட்சிகளை ஜனவரிக்குள் முடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிக்காந்துடன் இணைந்து எடுக்கப்படவுள்ள காட்சிகள் ஜனவரியில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
50 சதவீத காட்சிகள்
ஜனவரியில்தான் ரஜினிக்காந்த் படப்பிடிப்பில் இணைவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது 50 சதவீத காட்சிகளை முடித்து விட்டார் நடிகர் ரஜினிகாந்த் , எஞ்சியுள்ள காட்சிகள் மட்டுமே ஜனவரியில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பத்தாண்டுகளுக்கு பிறகு
ஜாக்கி ஷெராஃப் தியாகராஜன் குமாரராஜாவின் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்ற ஆரண்ய காண்டம் படத்தில் மறக்கமுடியாத பாத்திரத்தில் நடித்து கோலிவுட்டில் ஒரு சாதனை படைத்தார். பின்னர் பத்தாண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.